43,200 முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக பாலியல் தொழிலில் சிக்கிய இளம்பெண் ‘‘திடுக்’’ தகவல்

 இளம்பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக, பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது ஆண்டுதோறும் மெக்சிகோவில், அதிகரித்து வருகிறது. கடந்த நான்காண்டுகளாக, தினந்தோறும் குறைந்தபட்சம் 30 பேராவது என்னை பலாத்காரம் செய்திருப்பார்கள் என்று மெக்சிகோ நாட்டின் டெனன்சிங்கோ பகுதியைச் சேர்ந்த பெண், ‘‘திடுக்’’ தகவல் கூறியிருப்பதோடு, சுமார் 43,200 முறை தான், பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்டு தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வரும் கர்லா ஜெசிண்டோ என்ற 23 வயது பெண் சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்ள்ளதாவது:
வசதியான வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதா
க ஆசை காட்டி என்னை ஒருவன், டிலாக்ஸ்கலா மாகாணத்தில் உள்ள டெனன்சிங்கோவிற்கு அழைத்து சென்றான். மெக்சிகோவில் அங்குதான் பாலியல் தொழில் அதிகளவில் நடைபெறுவது எனக்குத் தெரியாது.

என்னை அழைத்துச் சென்றவனுடன் 3 மாதங்கள் தங்க வேண்டியதானது. அங்கு சென்ற பின்னர், நிலைமையை புரிந்து கொண்டேன். அங்கிருந்து தப்பிப்பது கனவிலும் நினைக்க முடியாதபடியாக இருந்தது. அதன்பின், பாலியல் தொழிலில் என்னை அவன் தள்ளினான். நான்காண்டுகளாக நான் பட்ட துயரங்கள், உலகில் எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது. காலை 10 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு வரை நரக வேதனை நீடிக்கும். பலமுறை சங்கிலியால் அடித்து, கீழே தள்ளி ஏறி மிதித்தும் என்னை கொடுமைப்படுத்தினர். இவ்வாறு கர்லா கூறியுள்ளார்.

ஆண்டு தோறும், 20,000 பெண்கள் பாலியல் தொழிலுக்காக மெக்சிகோவிற்கு கடத்தப்படுகிறார்கள் என சர்வதேச புலம்பெயர் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபலமான பாலியல் பெண்களில் 10 பேரில் ஒருவர் டெனான்சிங்கோவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories