நாமக்கல் மாவட்டத்தில் சக பள்ளி மாணவனி்ன் மலத்தை அள்ள வலியுறுத்திய தமிழக அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் அருகே ராமாபுரம் புதூரில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருபவன் சசிகரன் (வயது 7 ). அவனது சக பள்ளி வகுப்பு மாணவன் ஒருவன் மலம் கழித்ததாக கூறப்படுகிறது.
அந்த மலத்தை மாணவன் சசிகரனை சுத்தம் செய்ய பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி கூறியதாக கூறப்படுகிறது.
இதனை தனது பெற்றோரிடம் சசிகரன் கூறியுள்ளார். பள்ளி ஆசிரியையின் செயலை கண்டித்து அவரை கைது செய்ய நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் சசிதரன் தந்தை வீராச்சாமி புகார் அளித்தார்.
இதை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆசிரியை விஜயலட்சுமியை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் விஜயலட்சுமியை தற்காலிக பணி இடைநீக்கம் செய்துள்ளார்.


