சக பள்ளி மாணவனி்ன் மலத்தை அள்ள சொன்ன தமிழக அரசு பள்ளி ஆசிரியை கைது

Published:

நாமக்கல் மாவட்டத்தில் சக பள்ளி மாணவனி்ன் மலத்தை அள்ள வலியுறுத்திய தமிழக அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் அருகே ராமாபுரம் புதூரில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருபவன் சசிகரன் (வயது 7 ). அவனது சக பள்ளி வகுப்பு மாணவன் ஒருவன் மலம் கழித்ததாக கூறப்படுகிறது.

அந்த மலத்தை மாணவன் சசிகரனை சுத்தம் செய்ய பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி கூறியதாக கூறப்படுகிறது.

இதனை தனது பெற்றோரிடம் சசிகரன் கூறியுள்ளார். பள்ளி ஆசிரியையின் செயலை கண்டித்து அவரை கைது செய்ய நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் சசிதரன் தந்தை வீராச்சாமி புகார் அளித்தார்.

இதை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆசிரியை விஜயலட்சுமியை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் விஜயலட்சுமியை தற்காலிக பணி இடைநீக்கம் செய்துள்ளார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img