சென்னையில் ’ஓலா கேப்ஸ்’ தனது படகுகளையும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களையும் களத்தில் இறக்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகிறது.
’ஓலா கேப்ஸ்’ என்ற டாக்ஸி நிறுவனம், சென்னையில் மழை நீரால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் தனது படகுகளை அனுப்பி வெள்ள நீரில் தத்தளித்தவர்களை மீட்டு வர உதவி செய்து வருகிறது.
இதுகுறித்து ஓலா வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்களது படகுகளையும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களையும் அனுப்பி மக்களை மீட்டுள்ளோம்.
தீயணைப்புத் துறையினர் எங்களுக்குத் தந்த தகவல் அடிப்படையில் இதைச் செய்தோம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படகுகளை பயிற்சி பெற்ற படகோட்டிகள் செலுத்தினர்.
மேலும் மீனவர்களையும் ஈடுபடுத்திய இந்த நிறுவனம், உணவு, குடிநீர் ஆகியவற்றையும் இலவசமாக கொடுத்து உதவியுள்ளது.
ஒவ்வொரு படகிலும் 2 படகோட்டிகள், குடைகள் உள்ளிட்டவையும் என ஒரு படகுக்கு 5 முதல் 9 பேர் வரை மீட்டு வந்துள்ளனர்.
இன்னும் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால், அடுத்த 3 நாட்களுக்கு இந்தப் படகு சேவையை நடத்தப் போவதாகவும்’ ஓலா கேப்ஸ் டாக்ஸி நிறுவனம்அறிவித்துள்ளது


