வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை மக்களை மீட்க்க இலவச படகு சேவை

Published:

சென்னையில் ’ஓலா கேப்ஸ்’ தனது படகுகளையும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களையும் களத்தில் இறக்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகிறது.

’ஓலா கேப்ஸ்’ என்ற டாக்ஸி நிறுவனம், சென்னையில் மழை நீரால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் தனது படகுகளை அனுப்பி வெள்ள நீரில் தத்தளித்தவர்களை மீட்டு வர உதவி செய்து வருகிறது.

இதுகுறித்து ஓலா வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்களது படகுகளையும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களையும் அனுப்பி மக்களை மீட்டுள்ளோம்.

தீயணைப்புத் துறையினர் எங்களுக்குத் தந்த தகவல் அடிப்படையில் இதைச் செய்தோம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படகுகளை பயிற்சி பெற்ற படகோட்டிகள் செலுத்தினர்.

மேலும் மீனவர்களையும் ஈடுபடுத்திய இந்த நிறுவனம், உணவு, குடிநீர் ஆகியவற்றையும் இலவசமாக கொடுத்து உதவியுள்ளது.

ஒவ்வொரு படகிலும் 2 படகோட்டிகள், குடைகள் உள்ளிட்டவையும் என ஒரு படகுக்கு 5 முதல் 9 பேர் வரை மீட்டு வந்துள்ளனர்.

இன்னும் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால், அடுத்த 3 நாட்களுக்கு இந்தப் படகு சேவையை நடத்தப் போவதாகவும்’ ஓலா கேப்ஸ் டாக்ஸி நிறுவனம்அறிவித்துள்ளது

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img