மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்: நடிகை ரோஜா

Published:

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை மிரட்டி கட்சியில் இருந்து விலகச் செய்ய நினைக்கிறார்கள், நான் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என நடிகை ரோஜா கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா அவரது 46–வது பிறந்தநாளை கொண்டாடினார்.

மேலும் அவர் நகரியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோஜா, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. தொகுதிகளுக்குத் தான் அரசு கொடுத்த நிதியை ஒதுக்கிறார்.

அதனால் நான் எனது தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்து வருகிறேன்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை தெலுங்கு தேச கட்சியினர் மிரட்டி தங்களுக்கு பணிய வைக்க முயற்சிக்கிறார்கள்.

என்னையும் மிரட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகச் செய்ய நினைக்கிறார்கள்.அவர்களது கனவு பலிக்காது. அவர்களது மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

மேலும், எனது உயிர் மூச்சு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img