தேசத்தை அவமானப்படுத்திய மணிசங்கர் அய்யர் : பிரகாஷ் ஜவடேகர் கடும் தாக்கு

Published:

 

பாகிஸ்தான் இந்தியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றால் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததன் மூலம் மணிசங்கர் அய்யர் கூறி தேசத்தை அவமதித்துவிட்டார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு கவுகாத்தில்பேட்டி அளித்த வனம் மற்றும் சுற்றுச்சூழல் மத்திய துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது :

பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் தனது மன சம நிலையை மணி சங்கர் இழந்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். மணி சங்கர் அய்யரின் பிரதமர் மோடியை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தேசத்தையும் அவமானப்படுத்திவிட்டார்.

பாரீஸில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சமாஜ்வடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆசம் கான் ஆதரவு தெரிவிக்கிறார். குற்றமற்றவர்களை முதலில் கொன்றதற்காக பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டது இந்த தாக்குதல் என ஆசம் கான் தெரிவித்துள்ளார் ஆனால், இவரது கருத்துக்கு சமாஜ்வாடி கட்சி கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் ஆசம் கானின் மற்றொரு வழியில் மணிசங்கர் அய்யர் உள்ளார்.இந்தியாபாகிஸ்தான் பிரச்சினையை தீர்க்க கூடாது என்பது பாகிஸ்தானின் வழியாகும். ஆனால், பாகிஸ்தான் உட்பட பிறநாடுகளுடன் நல்லுறவை தொடங்கும் நடவடிக்கைகளில் இறங்கியது பிரதமர் மோடிதான் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான மணி சங்கர் அய்யர், இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கப்பட வேண்டுமானால் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று பேசியதாக சொல்லப்படுகிறது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img