மழை தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவு படி சேலம் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது என கூறினார்.
தமிழகத்தில் கடந்த பத்து நாட்களாகதொடர்ந்து பெய்துவரும் பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அனைத்துப் பிரிவு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு, பலர் வீடிழந்து, வாழ்வாதாரம் உள்ளிட்ட உடைமைகளை இழந்து வருந்தி நிற்கின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்
காணொளியுடன் திரைப்பட கமெடி ஒலி இணைக்கப்பட்ட காணொளி வாட்ஸ்ஆப்பில் வைரலாக
பரவிவருகிறது .
அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
COURTESY & VIDEO SOURCE : DINAMALAR


