தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது : கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

Published:

தமிழ்நாட்டுக்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதற்கு

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது கூறியுள்ளது.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சார்பில் 17.10.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், 30.9.2015 க்குள் தமிழகத்துக்கு சேரவேண்டிய 45.327 டி.எம்.சி. தண்ணீரையும், தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி 11.2.2015க்குள் தமிழகத்துக்கு சேர்ந்திருக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரையும் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்.

இதுதொடர்பாக காவிரி மேற்பார்வை குழுவை உடனடியாக கூட்டி, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள தண்ணீர் அளவை உடனடியாக தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட வேண்டும். மேலும் நதிநீர் தீர்ப்பாயம் குறிப்பிட்ட அளவு மட்டுமே கர்நாடக பகுதியில் பயிர் சாகுபடி செய்வதை காவிரி மேற்பார்வை குழு உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

தமிழக அரசின் இந்த இடைக்கால மனு மீது கர்நாடக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கர்நாடக அரசு அளித்த பதில் விவரமாவது :-

தமிழக அரசின் இடைக்கால மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து குறைபாடுகளும் மறுக்கப்படுகிறது. அந்த மனுவில் எதுவும் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை. 22.5.2013 அன்று மத்திய அரசு காவிரி மேற்பார்வை குழுவை அமைத்தது. 28.9.2015 அன்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தில் இரு பகுதிகளிலும் மழைநீர் அளவு, நீராதார நிலைமை மற்றும் தேக்கி வைக்கப்பட்ட நீரின் அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டது.

தற்போது கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. தமிழ்நாட்டில் இப்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் நீர் தேவைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். எனவே தமிழக அரசின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இவ்வாறு கர்நாடக அரசின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img