தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது : கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

தமிழ்நாட்டுக்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதற்கு

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது கூறியுள்ளது.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சார்பில் 17.10.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், 30.9.2015 க்குள் தமிழகத்துக்கு சேரவேண்டிய 45.327 டி.எம்.சி. தண்ணீரையும், தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி 11.2.2015க்குள் தமிழகத்துக்கு சேர்ந்திருக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரையும் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்.

இதுதொடர்பாக காவிரி மேற்பார்வை குழுவை உடனடியாக கூட்டி, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள தண்ணீர் அளவை உடனடியாக தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட வேண்டும். மேலும் நதிநீர் தீர்ப்பாயம் குறிப்பிட்ட அளவு மட்டுமே கர்நாடக பகுதியில் பயிர் சாகுபடி செய்வதை காவிரி மேற்பார்வை குழு உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த இடைக்கால மனு மீது கர்நாடக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கர்நாடக அரசு அளித்த பதில் விவரமாவது :-

தமிழக அரசின் இடைக்கால மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து குறைபாடுகளும் மறுக்கப்படுகிறது. அந்த மனுவில் எதுவும் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை. 22.5.2013 அன்று மத்திய அரசு காவிரி மேற்பார்வை குழுவை அமைத்தது. 28.9.2015 அன்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தில் இரு பகுதிகளிலும் மழைநீர் அளவு, நீராதார நிலைமை மற்றும் தேக்கி வைக்கப்பட்ட நீரின் அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டது.

தற்போது கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. தமிழ்நாட்டில் இப்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் நீர் தேவைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். எனவே தமிழக அரசின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு கர்நாடக அரசின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories