தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது : கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

தமிழ்நாட்டுக்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதற்கு

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது கூறியுள்ளது.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சார்பில் 17.10.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், 30.9.2015 க்குள் தமிழகத்துக்கு சேரவேண்டிய 45.327 டி.எம்.சி. தண்ணீரையும், தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி 11.2.2015க்குள் தமிழகத்துக்கு சேர்ந்திருக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரையும் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்.

இதுதொடர்பாக காவிரி மேற்பார்வை குழுவை உடனடியாக கூட்டி, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவில் குறிப்பிட்டுள்ள தண்ணீர் அளவை உடனடியாக தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட வேண்டும். மேலும் நதிநீர் தீர்ப்பாயம் குறிப்பிட்ட அளவு மட்டுமே கர்நாடக பகுதியில் பயிர் சாகுபடி செய்வதை காவிரி மேற்பார்வை குழு உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

தமிழக அரசின் இந்த இடைக்கால மனு மீது கர்நாடக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கர்நாடக அரசு அளித்த பதில் விவரமாவது :-

தமிழக அரசின் இடைக்கால மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து குறைபாடுகளும் மறுக்கப்படுகிறது. அந்த மனுவில் எதுவும் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை. 22.5.2013 அன்று மத்திய அரசு காவிரி மேற்பார்வை குழுவை அமைத்தது. 28.9.2015 அன்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தில் இரு பகுதிகளிலும் மழைநீர் அளவு, நீராதார நிலைமை மற்றும் தேக்கி வைக்கப்பட்ட நீரின் அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டது.

தற்போது கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. தமிழ்நாட்டில் இப்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் நீர் தேவைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். எனவே தமிழக அரசின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இவ்வாறு கர்நாடக அரசின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories