தமிழக அரசு பேருந்தை மது போதையில் ஓட்டிய ஓட்டுநர்

தேனி மாவட்டம் போடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற அரசுப் பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் அலறியதை அடுத்து பயணி ஒருவரே மாற்று ஓட்டுநராக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு வேளாங்கண்ணிக்குச் சென்ற போடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டுப்பாட்டில் உள்ள பேருந்தை, வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மதிப்புராஜா என்பவர் ஓட்டிச் சென்றார்.

மது போதையில் இருந்த மதிப்புராஜா, போடியில் இருந்து தடுமாறியவாறு தாறுமாறாகபேருந்தை ஓட்டிச் சென்றதாகக் சொல்லப்படுகிறது. தேனி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது, அவர் நிதானத்தை இழந்து பேருந்தை தாறுமாறாக ஓட்டியதால், பயணிகள் அலறியுள்ளனர். இதையடுத்து பேருந்தில் குடும்பத்துடன் பயணம் செய்த தேனியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் சுல்தான் இப்ராஹிம், மாற்று ஓட்டுநராக மாறி பேருந்தை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். போதையில் இருந்த மதிப்புராஜா வத்தலகுண்டில் இறக்கிவிடப்பட்டுள்ளார். தொடர்ந்து பேருந்தை திண்டுக்கல்லுக்கு ஓட்டிச் சென்ற சுல்தான் இப்ராஹிம், பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகப் பணி மனையில் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அரசுப் போக்குவரத்துக் கழக தேனி மண்டல மேலாளர் ஆனந்தனிடம் கேட்டதற்கு, பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால், மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது. போதையில் இருந்த ஓட்டுநர் மதிப்புராஜாமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories