தமிழக அரசு பேருந்தை மது போதையில் ஓட்டிய ஓட்டுநர்

Published:

தேனி மாவட்டம் போடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற அரசுப் பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் அலறியதை அடுத்து பயணி ஒருவரே மாற்று ஓட்டுநராக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு வேளாங்கண்ணிக்குச் சென்ற போடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டுப்பாட்டில் உள்ள பேருந்தை, வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மதிப்புராஜா என்பவர் ஓட்டிச் சென்றார்.

மது போதையில் இருந்த மதிப்புராஜா, போடியில் இருந்து தடுமாறியவாறு தாறுமாறாகபேருந்தை ஓட்டிச் சென்றதாகக் சொல்லப்படுகிறது. தேனி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது, அவர் நிதானத்தை இழந்து பேருந்தை தாறுமாறாக ஓட்டியதால், பயணிகள் அலறியுள்ளனர். இதையடுத்து பேருந்தில் குடும்பத்துடன் பயணம் செய்த தேனியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் சுல்தான் இப்ராஹிம், மாற்று ஓட்டுநராக மாறி பேருந்தை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். போதையில் இருந்த மதிப்புராஜா வத்தலகுண்டில் இறக்கிவிடப்பட்டுள்ளார். தொடர்ந்து பேருந்தை திண்டுக்கல்லுக்கு ஓட்டிச் சென்ற சுல்தான் இப்ராஹிம், பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகப் பணி மனையில் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அரசுப் போக்குவரத்துக் கழக தேனி மண்டல மேலாளர் ஆனந்தனிடம் கேட்டதற்கு, பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால், மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது. போதையில் இருந்த ஓட்டுநர் மதிப்புராஜாமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img