கடத்தல், கொலை, கொள்ளை, உள்ளிட்ட 20–க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யும்படி மதுரை மாநகர காவல் ஆணையாளர் சைலேஷ் குமார்யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மு.க.அழகிரியின் ஆதரவாளருமான பொட்டு சுரேஷ் கொலை
மதுரையில் கடந்த 2013–ம் ஆண்டு செய்யப்பட்டார்.
அந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி 2½ ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்ற காவல் முடிவடைந்ததையொட்டி நேற்று மாலை பாளையங்கோட்டைசிறையில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் மதுரை 4–வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அட்டாக் பாண்டியை போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை மேலும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி (பொறுப்பு) பால்பாண்டி உத்தரவிட்டார்.
அவர் மீது கடத்தல், கொலை, கொள்ளை, ஆயுதம் கடத்தல் போன்ற 20–க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க சுப்பிரமணியபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கோட்டைச்சாமி மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாநகர போகாவல் ஆணையாளர், அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கான உத்தரவு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.


