சிங்கப்பூருக்கு விஜயகாந்த் திடீர் பயணம்: தீவிர அரசியலுக்கு திட்டம்?

சென்னை, தேமுதிக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை நேற்று திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். அண்மையில், திடீர் தீவிர அரசியல் ஆர்வம் காட்டி, மேகதாது அணை விவகாரம் உள்பட தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளைத் தீர்க்கக் கோரி எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை சந்தித்தார் விஜயகாந்த். இதனால் அவர் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகப் பேச்சு எழுந்தது. இருப்பினும் அதை மறுத்த விஜயகாந்த், பின்னர், பாஜக சார்பில் தன்னையே முதல்வர் பதவி வேட்பாளராக முன்னிறுத்தப் பட வேண்டும் என்று மோடியிடம் கோரிக்கை வைத்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவர் மனைவி பிரேமலதாவும் உடன் சென்றுள்ளார். தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவிருப்பதால், தீவிர அரசியலில் களம் இறங்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அதனால், அதுகுறித்து ஆலோசிக்கவும், கூட்டணி அமைப்பது குறித்து யோசிக்கவும், தமிழகம் முழுவதும் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால் அதற்கான முன் ஏற்பாடுக்காகவும், புத்துணர்ச்சிக்காகவும் அவர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தேமுதிகவினர் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories