சிங்கப்பூருக்கு விஜயகாந்த் திடீர் பயணம்: தீவிர அரசியலுக்கு திட்டம்?

சென்னை, தேமுதிக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை நேற்று திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். அண்மையில், திடீர் தீவிர அரசியல் ஆர்வம் காட்டி, மேகதாது அணை விவகாரம் உள்பட தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளைத் தீர்க்கக் கோரி எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை சந்தித்தார் விஜயகாந்த். இதனால் அவர் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகப் பேச்சு எழுந்தது. இருப்பினும் அதை மறுத்த விஜயகாந்த், பின்னர், பாஜக சார்பில் தன்னையே முதல்வர் பதவி வேட்பாளராக முன்னிறுத்தப் பட வேண்டும் என்று மோடியிடம் கோரிக்கை வைத்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவர் மனைவி பிரேமலதாவும் உடன் சென்றுள்ளார். தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவிருப்பதால், தீவிர அரசியலில் களம் இறங்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அதனால், அதுகுறித்து ஆலோசிக்கவும், கூட்டணி அமைப்பது குறித்து யோசிக்கவும், தமிழகம் முழுவதும் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால் அதற்கான முன் ஏற்பாடுக்காகவும், புத்துணர்ச்சிக்காகவும் அவர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தேமுதிகவினர் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories