பாலியா: உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தின் மாரிதர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணுக்கும், பீகாரைச் சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்களது திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாரிதர் கிராமத்தில் இரு வீட்டாரும் கூடினர். திருமண தினத்தன்றுதான், மணமகன் மனோஜ் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்ற விஷயம் மணப்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என அவர் கூறியும் பெற்றோர் ஏற்கவில்லை. உடனடியாக, மணமகனுக்கு ஒரு சோதனை வைத்தார் மணமகள். கொஞ்சம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அவரை எண்ணி அது எவ்வளவு இருக்கிறது என்று கூறச் சொன்னார். அவ்வாறு அவர் மட்டும் ரூபாய் நோட்டை சரியாக எண்ணிக் கூறினால், தான் திருமணம் செய்து கொள்ளத் தயார் என்றார். ஆனால் ஒருமுறைக்கு இருமுறை, மூன்று முறை எண்ணியும் மணமகன் மனோஜ் ரூபாய் நோட்டு எண்ணிக்கையை தவறாகக் கூறியுள்ளார். இதனால், கோபத்தில் திருமணத்தை நிறுத்தி விட்டார் மணப்பெண். இதனால், ஆத்திரமடைந்த மணமகன் குடும்பத்தினர் பிரச்னையில் ஈடுபட்டனர். ஆனால், கிராமப் பஞ்சாயத்தார் தலையிட்டு, படிப்பறிவில்லாதவர் என்ற விஷயத்தை மறைத்து பட்டதாரிப் பெண்ணுக்கு மணமுடிக்க நினைத்தது தவறு என்று கூறி அனுப்பி வைத்தனர். வேறு வழியில்லாமல் மணமகன் குடும்பத்தினர் சோகத்துடன் பீகாருக்குப் புறப்பட்டனர். ரூபாய் நோட்டை கொடுத்து எண்ணச் சொல்லி, அது தெரியாமல் தவித்த மணமகனை நிராகரித்த மணப்பெண்ணின் இந்தச் செயல், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
நெல்லை
தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
Entertainment News
Next article

