பாலியா: உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தின் மாரிதர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணுக்கும், பீகாரைச் சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்களது திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாரிதர் கிராமத்தில் இரு வீட்டாரும் கூடினர். திருமண தினத்தன்றுதான், மணமகன் மனோஜ் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்ற விஷயம் மணப்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என அவர் கூறியும் பெற்றோர் ஏற்கவில்லை. உடனடியாக, மணமகனுக்கு ஒரு சோதனை வைத்தார் மணமகள். கொஞ்சம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அவரை எண்ணி அது எவ்வளவு இருக்கிறது என்று கூறச் சொன்னார். அவ்வாறு அவர் மட்டும் ரூபாய் நோட்டை சரியாக எண்ணிக் கூறினால், தான் திருமணம் செய்து கொள்ளத் தயார் என்றார். ஆனால் ஒருமுறைக்கு இருமுறை, மூன்று முறை எண்ணியும் மணமகன் மனோஜ் ரூபாய் நோட்டு எண்ணிக்கையை தவறாகக் கூறியுள்ளார். இதனால், கோபத்தில் திருமணத்தை நிறுத்தி விட்டார் மணப்பெண். இதனால், ஆத்திரமடைந்த மணமகன் குடும்பத்தினர் பிரச்னையில் ஈடுபட்டனர். ஆனால், கிராமப் பஞ்சாயத்தார் தலையிட்டு, படிப்பறிவில்லாதவர் என்ற விஷயத்தை மறைத்து பட்டதாரிப் பெண்ணுக்கு மணமுடிக்க நினைத்தது தவறு என்று கூறி அனுப்பி வைத்தனர். வேறு வழியில்லாமல் மணமகன் குடும்பத்தினர் சோகத்துடன் பீகாருக்குப் புறப்பட்டனர். ரூபாய் நோட்டை கொடுத்து எண்ணச் சொல்லி, அது தெரியாமல் தவித்த மணமகனை நிராகரித்த மணப்பெண்ணின் இந்தச் செயல், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...
Entertainment News
Next article

