8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Published:

07 July06 8 way road - 20268 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்ற போதிலும் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு தேவையான விளக்கங்களை தெரிவித்து நிலத்தை அளவீடுசெய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசும் தீவிரம் காட்டி வருகிறது என்பது குரிப்ப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img