குதிரை பேரம் நடந்ததால் ரகசிய வாக்கெடுப்பு கோரினோம்: ஸ்டாலின்

tamil-nadu-secretariat-tamil-nadu-assembly

சென்னை:

குதிரை பேரம் நடந்ததால்தான் ரகசிய வாக்கெடுப்புக்குக் கோரிக்கை விடுத்தோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக இன்று காலை சட்டமன்றம் கூடியதும், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.  சட்டப்பேரவையில் சரவணன் எம்.எல்.ஏ வீடியோ விவகாரம் பற்றி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து அமளி ஏற்பட்டது.

ஆனால் இதற்கு, சபாநாயகர் தனபால் பேச மறுப்பு தெரிவித்தார்.  தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை அடுத்து,  தலைமைச் செயலகம் எதிரே உள்ள காமராஜர் சாலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் சாலை மறியல், மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜாஜி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர்.

ராஜாஜி சாலையில் திமுகவினரோடு சாலைமறியலில் ஈடுபட்டதால் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏக்களும் கைதுசெய்யப்பட்டனர்.

 

MLA-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்தும் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும், கவிழ்க்கப்பட வேண்டும். அதிமுக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடந்ததால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரினோம் என்று  மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முன்னதாக,  சட்டப்  பேரவையில் வில்லிவாக்கம் ரயில்வே பாலம் குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வில்லிவாக்கம் பாலம் குறித்து 2015-ம் ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதாகவும், ரூ.7.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் பதில் அளித்தது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் பாலம் கட்டாதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories