சென்னை வந்து சென்ற அமித் ஷா; மொழி பெயர்ப்பு சர்ச்சைகளால் விழி பிதுங்கும் ‘உறவு’

amith sha h raja - 2026

திங்கள் கிழமை சென்னை வந்து கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. அப்போது தொடங்கிய சர்ச்சைகள் இன்று வரை ஓயவில்லை.

அமித் ஷாவுக்கு எதிர்ப்பு கிளப்பின திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். தொடர்ந்து அமித் ஷாவின் பேச்சை மொழி பெயர்த்த போது, மைக்ரோ இரிகேஷன் என்பதை சிறு நீர்ப்பாசனம் என்று ஹெச்.ராஜா சொன்னதை சிறுநீர்ப் பாசனம் என்று சொன்னதாக சர்ச்சை கிளப்பினார்கள்.

அடுத்து, அமித் ஷா ஊழல் குறித்துச் சொன்ன சொல், ஆளும் அதிமுகவிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக., ஊழல் கட்சி என்றும், ஊழல் அரசு என்றும் அவர் சொன்னதாக அதிமுக.,வில் புயல் அடிக்கிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த சுமுக உறவு கேள்விக்குறியாகி இருப்பதாக அரசியல் மட்டத்திலும் ஊடகங்களிலும் விவாதங்கள் எழும்பியுள்ளன.

இந்நிலையில், அமித் ஷா ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஊழல் புரையோடிப் போயுள்ளது என்று சொன்னார். இது மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட சிறு குறை என அடுத்த  ‘சிறு’ தொற்றிக் கொண்டது. இதனை கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெளிவாக்கியுள்ளார்.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் குறிப்பிட்டபோது, இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்த அமித் ஷா @AmitShah இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்தியுள்ளார்.

1. இன்றுள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவே திட்டமிடுகிறது என்ற யதார்த்த நிலை

2. தேர்தலுக்குப் பின் அமைய உள்ள, பா.ஜ.க. அங்கம் வகிக்கும் ஆட்சி குறித்த தெளிவு

தமிழகத்தில் ஏதோ ஒரு கட்சியோ, அரசோ மட்டும் ஊழல் எனக் குறிப்பிடவில்லை. காரணம் ‘தி.மு.க + காங்கிரஸ்’ மாற்றல்ல; அவர்களும் ஊழல்வாதிகள்; தேர்தலில் வாக்கு பெற பணம் தரும் விபரீதம் அதிலும் அதிகம். எனவே ‘மாற்று என்பது தனிநபரோ, கட்சியோ, கூட்டணியோ அல்ல. ஆட்சியின் தன்மையும், நடைமுறையும் மாற வேண்டும்.

இன்றுள்ள ஊழல் மயமான நிலைக்கு, “ஊழலற்ற நிர்வாகமே மாற்று” என்பது தான் அமித் ஷா அவர்கள் தெரிவித்த கருத்தின் விளக்கம் என நான் கருதுகிறேன்…. என்று கூறியுள்ளார்.

ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும், இப்போது எழுந்துள்ள புயல் அடங்க இன்னும் சிறிது காலம் ஆகும் போலும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories