சென்னை வந்து சென்ற அமித் ஷா; மொழி பெயர்ப்பு சர்ச்சைகளால் விழி பிதுங்கும் ‘உறவு’

amith sha h raja - 2026

திங்கள் கிழமை சென்னை வந்து கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. அப்போது தொடங்கிய சர்ச்சைகள் இன்று வரை ஓயவில்லை.

அமித் ஷாவுக்கு எதிர்ப்பு கிளப்பின திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். தொடர்ந்து அமித் ஷாவின் பேச்சை மொழி பெயர்த்த போது, மைக்ரோ இரிகேஷன் என்பதை சிறு நீர்ப்பாசனம் என்று ஹெச்.ராஜா சொன்னதை சிறுநீர்ப் பாசனம் என்று சொன்னதாக சர்ச்சை கிளப்பினார்கள்.

அடுத்து, அமித் ஷா ஊழல் குறித்துச் சொன்ன சொல், ஆளும் அதிமுகவிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக., ஊழல் கட்சி என்றும், ஊழல் அரசு என்றும் அவர் சொன்னதாக அதிமுக.,வில் புயல் அடிக்கிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த சுமுக உறவு கேள்விக்குறியாகி இருப்பதாக அரசியல் மட்டத்திலும் ஊடகங்களிலும் விவாதங்கள் எழும்பியுள்ளன.

இந்நிலையில், அமித் ஷா ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஊழல் புரையோடிப் போயுள்ளது என்று சொன்னார். இது மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட சிறு குறை என அடுத்த  ‘சிறு’ தொற்றிக் கொண்டது. இதனை கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெளிவாக்கியுள்ளார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் குறிப்பிட்டபோது, இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்த அமித் ஷா @AmitShah இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்தியுள்ளார்.

1. இன்றுள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவே திட்டமிடுகிறது என்ற யதார்த்த நிலை

2. தேர்தலுக்குப் பின் அமைய உள்ள, பா.ஜ.க. அங்கம் வகிக்கும் ஆட்சி குறித்த தெளிவு

தமிழகத்தில் ஏதோ ஒரு கட்சியோ, அரசோ மட்டும் ஊழல் எனக் குறிப்பிடவில்லை. காரணம் ‘தி.மு.க + காங்கிரஸ்’ மாற்றல்ல; அவர்களும் ஊழல்வாதிகள்; தேர்தலில் வாக்கு பெற பணம் தரும் விபரீதம் அதிலும் அதிகம். எனவே ‘மாற்று என்பது தனிநபரோ, கட்சியோ, கூட்டணியோ அல்ல. ஆட்சியின் தன்மையும், நடைமுறையும் மாற வேண்டும்.

இன்றுள்ள ஊழல் மயமான நிலைக்கு, “ஊழலற்ற நிர்வாகமே மாற்று” என்பது தான் அமித் ஷா அவர்கள் தெரிவித்த கருத்தின் விளக்கம் என நான் கருதுகிறேன்…. என்று கூறியுள்ளார்.

ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும், இப்போது எழுந்துள்ள புயல் அடங்க இன்னும் சிறிது காலம் ஆகும் போலும்!

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories