சென்னை வந்து சென்ற அமித் ஷா; மொழி பெயர்ப்பு சர்ச்சைகளால் விழி பிதுங்கும் ‘உறவு’

amith sha h raja - 2026

திங்கள் கிழமை சென்னை வந்து கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. அப்போது தொடங்கிய சர்ச்சைகள் இன்று வரை ஓயவில்லை.

அமித் ஷாவுக்கு எதிர்ப்பு கிளப்பின திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். தொடர்ந்து அமித் ஷாவின் பேச்சை மொழி பெயர்த்த போது, மைக்ரோ இரிகேஷன் என்பதை சிறு நீர்ப்பாசனம் என்று ஹெச்.ராஜா சொன்னதை சிறுநீர்ப் பாசனம் என்று சொன்னதாக சர்ச்சை கிளப்பினார்கள்.

அடுத்து, அமித் ஷா ஊழல் குறித்துச் சொன்ன சொல், ஆளும் அதிமுகவிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக., ஊழல் கட்சி என்றும், ஊழல் அரசு என்றும் அவர் சொன்னதாக அதிமுக.,வில் புயல் அடிக்கிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த சுமுக உறவு கேள்விக்குறியாகி இருப்பதாக அரசியல் மட்டத்திலும் ஊடகங்களிலும் விவாதங்கள் எழும்பியுள்ளன.

இந்நிலையில், அமித் ஷா ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஊழல் புரையோடிப் போயுள்ளது என்று சொன்னார். இது மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட சிறு குறை என அடுத்த  ‘சிறு’ தொற்றிக் கொண்டது. இதனை கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெளிவாக்கியுள்ளார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் குறிப்பிட்டபோது, இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்த அமித் ஷா @AmitShah இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்தியுள்ளார்.

1. இன்றுள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவே திட்டமிடுகிறது என்ற யதார்த்த நிலை

2. தேர்தலுக்குப் பின் அமைய உள்ள, பா.ஜ.க. அங்கம் வகிக்கும் ஆட்சி குறித்த தெளிவு

தமிழகத்தில் ஏதோ ஒரு கட்சியோ, அரசோ மட்டும் ஊழல் எனக் குறிப்பிடவில்லை. காரணம் ‘தி.மு.க + காங்கிரஸ்’ மாற்றல்ல; அவர்களும் ஊழல்வாதிகள்; தேர்தலில் வாக்கு பெற பணம் தரும் விபரீதம் அதிலும் அதிகம். எனவே ‘மாற்று என்பது தனிநபரோ, கட்சியோ, கூட்டணியோ அல்ல. ஆட்சியின் தன்மையும், நடைமுறையும் மாற வேண்டும்.

இன்றுள்ள ஊழல் மயமான நிலைக்கு, “ஊழலற்ற நிர்வாகமே மாற்று” என்பது தான் அமித் ஷா அவர்கள் தெரிவித்த கருத்தின் விளக்கம் என நான் கருதுகிறேன்…. என்று கூறியுள்ளார்.

ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும், இப்போது எழுந்துள்ள புயல் அடங்க இன்னும் சிறிது காலம் ஆகும் போலும்!

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories