கனமழையால் மண் சரிவு ஏற்ப்பட்டு பாறைகள் விழுந்தால் ரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன், தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீரமைப்பு காரணங்களாலும், காலநிலையை கருதியும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் (நவ.20), இன்றும் 21-11-2015வரை மேட்டுப் பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே துறை அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக உதகை ஏரியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை மற்றும் தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங் கிய மழை, நேற்று காலை வரை இடைவிடாது கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை ஒரே இரவில் 914.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை நிவாரணப் பணிகளை ஆய்வு செய்துவரும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யு.சி.டேவிதார், மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரயில் பாதையில் ஹில் குரோவ் அருகே பெரிய அளவி லான பாறை விழுந்தது கண்டறியப் பட்டது. இதனால், மேட்டுப்பாளை யத்தில் இருந்து நேற்று காலை குன்னூர் புறப்பட்ட மலை ரயில், கல்லாறில் நிறுத்தப்பட்டது. சுற் றுலா பயணிகள், மீண்டும் மேட்டுப் பாளையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் சங்கர் செய்தியாளர்களிடம்
தெரிவித்துள்ளதாவது :-
நீலகிரி மாவட்டத்தில் 194 தாழ்வான பகுதிகளும், 24 நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி களும் உள்ளன. மழையால் 6 வீடு கள் முழுமையாகவும், 45 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

ஆங்காங்கே மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்துள்ளன. அவை, உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதி களில் வசிப்பவர்களை, பாதுகாப் பான இடங்களுக்குச் செல்ல அறி வுறுத்தப்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒருவழிப் பாதைகளாக மாற்றப் பட்டுள்ளன என்று செய்தியாளர்களிடம் ஆட்சியர் சங்கர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories