கனமழையால் மண் சரிவு ஏற்ப்பட்டு பாறைகள் விழுந்தால் ரயில் சேவை ரத்து

Published:

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன், தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீரமைப்பு காரணங்களாலும், காலநிலையை கருதியும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் (நவ.20), இன்றும் 21-11-2015வரை மேட்டுப் பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே துறை அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக உதகை ஏரியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை மற்றும் தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங் கிய மழை, நேற்று காலை வரை இடைவிடாது கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை ஒரே இரவில் 914.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை நிவாரணப் பணிகளை ஆய்வு செய்துவரும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யு.சி.டேவிதார், மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரயில் பாதையில் ஹில் குரோவ் அருகே பெரிய அளவி லான பாறை விழுந்தது கண்டறியப் பட்டது. இதனால், மேட்டுப்பாளை யத்தில் இருந்து நேற்று காலை குன்னூர் புறப்பட்ட மலை ரயில், கல்லாறில் நிறுத்தப்பட்டது. சுற் றுலா பயணிகள், மீண்டும் மேட்டுப் பாளையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் சங்கர் செய்தியாளர்களிடம்
தெரிவித்துள்ளதாவது :-
நீலகிரி மாவட்டத்தில் 194 தாழ்வான பகுதிகளும், 24 நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி களும் உள்ளன. மழையால் 6 வீடு கள் முழுமையாகவும், 45 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

ஆங்காங்கே மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்துள்ளன. அவை, உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதி களில் வசிப்பவர்களை, பாதுகாப் பான இடங்களுக்குச் செல்ல அறி வுறுத்தப்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒருவழிப் பாதைகளாக மாற்றப் பட்டுள்ளன என்று செய்தியாளர்களிடம் ஆட்சியர் சங்கர் தெரிவித்துள்ளார்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img