தலைக்கீழாக பறந்த இந்திய தேசியக் கொடி : கண்டு கொள்ளாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்த பிரதமர் மோடி

Published:

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய தேசியக் கொடி தலைக்கீழாக பறந்தும் அதை கொள்ளாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்ததால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கோலாலம்பூரில் ஜப்பான் பிரதமரை மோடி சந்தித்த போது தலைகீழாக தேசியக் கொடி பறந்ததுள்ளது. பிரதமர் மோடி தேசியக் கொடி தலைகீழாக இருப்பதை கூட பார்வையிடாமல் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்துள்ளார்.

மூக வளைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கைக்கு கடும் கண்டன விமர்சனம் செய்துள்ளனர்.68 ஆண்டில் தேசியக் கொடிக்கு தலைகீழாக மரியாதை செலுத்திய பிரதமர் என விமர்சித்துள்ளனர். இந்தியக் கொடி தவறாக இருப்பதை மலேசிய பிரதமர் சுட்டிக்காட்டியதாக தகவல் கூறுகின்றன.

மலேசியாவில் நடந்து வரும் 2 நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று இன்று உரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த கொடி யாரால் வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அரசு தரப்பில் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருந்த போதிலும் இந்திய தேசியக் கொடி தலைகீழாக பறந்ததுள்ளதை கூட கண்டு கொள்ளாமல் ஒருவர் இந்திய பிரதமராக பதவியில் இருப்பது முறையானது அல்ல .! என்பது போன்ற பல கேள்விகளை பலர் எழுப்பி தேசியக்கொடி தலைகீழாக இருக்கும் புகைப்படத்தையும், காணொளியையும் வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img