மோடிக்கு மீண்டும் கோரிக்கை விடுத்த ஜெயலலிதா !

Published:

தமிழக முதலமைச்சர்ஜெயலலிதா பிரதமர் பிரதமர் மோடிக்கு இலங்கை கடற்படையின சிறை பிடித்த 14 மீனவர்கள் மற்றும் 50 படகுகளை உடனே விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க மீண்டும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :-.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் கடந்த 8 ஆம் தியதி 4 மீனவர்களை சிறை பிடித்திருந்தனர் தற்போது 18 ஆம் தியதி 14 மீனவர்களையும் 47 படகுகளையும் இலங்கை படையினர் சிறை பிடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை பிரச்சினைக்கு மத்திய அரசை அனுமதிக்காமல் தனிப்பட்ட முறையில் பிரதமராகிய நீங்கள் முடிவெடுக்க வேண்டும். தூதரக ரீதியாக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க டனடி நடவடிக்கை எடுக்க மீண்டும் வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img