செய்தியாளரின் கேள்விக்கு பயந்து ஓடிய அ.தி.மு.க கட்சியை சேர்ந்த மேயர்

Published:

தமிழக அரசாங்கம் சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை முறையாக பராமரிக்காததாலும் ஏரி,குளங்களை ஆக்கிரமித்த பொது மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த சென்னை மேயர் சைதை துரைசாமியிடம் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காணரமாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் செய்தியாளரின் கேள்விக்கு அ.தி.மு.க கட்சியை சேர்ந்த சென்னை மேயர் சைதை துரைசாமி பதில் அளிக்க முடியாமல் பயந்து ஓடுகிறார். மேயர் சைதை துரைசாமி பயந்து ஓடும் காணொளி வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது

 

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img