வெள்ள நிவாரண நிதியாக ரூ.8,481 கோடி வழங்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 
 
தமிழகத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.8,481 கோடி வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதாஎழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ள தாவது :-
 
தமிழகத்தில் நவம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், சேதமடைந்த கட்டமைப்புகளை சீர் செய்யவும், மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிதியுதவி அளிக்க வேண்டும்.
 
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களும், தமிழகத்தின் பல மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டன.தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, அமைச்சர்களும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும், ராணுவம், விமானப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் மீட்புப் பணிகளுக்காக மேற்கண்ட படை வீரர்களை உடனடியாக அனுப்பி
உதவியமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சுமார் 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. நெய்வேலியில் கடந்த 9ம் தேதி 437 மி.மீ. மழை பதிவானது. அதே போல, சென்னையிலும், நவம்பர் 20ம் தேதிக்குள்ளாக, கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத அளவுக்கு மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவ மழைக்கு தமிழகத்தில் 169 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள், பாலங்கள், நீர் நிலைகள், மின்சாரம் வழங்கும் மின் கட்டமைப்புகள் என மாநிலத்தின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.எனவே, தமிழகத்துக்கு நிவாரண உதவியாக உடனடியாக ரூ.500 கோடியை ஒதுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
இதில்லாமல், தமிழகத்தில் பழுதான உள்பட்டமைப்புகளை சரி செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் ரூ.8,481 கோடி தேவைப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அரசு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories