ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் விஜயகாந்த் தரிசனம்

Published:

 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்ய முடிவு செய்தார்.
 
இதன்படி விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மைத்துனரும், தே.மு.தி.க. இளைஞர் அணி தலைவருமான சுதீஷ், மற்றும் 2 மகன்களுடன் நேற்று மதியம் விமானம் மூலம் மும்பை புறப்பட்டார். அங்கு தனது நண்பர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார்.
 
இன்று காலை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கொறடா சந்திரசேகர் தலைமையில் மும்பை புறப்பட்டு சென்றனர். அங்கு விஜயகாந்துடன் இணைந்து ஸ்ரீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.
 
தரிசனத்தை முடித்து அனைவரும் இன்று மாலையே சென்னை திரும்புகிறார்கள்.
 
முன்னதாக நேற்று மும்பை புறப்பட்ட விஜயகாந்தை விமான நிலையத்தில் தே.மு.தி.க. சட்டமன்ற கொறடா சந்திரகுமார் உள்பட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
 
தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்ரீரடி செல்வது ஏன்? என்று கேட்டபோது நிர்வாகிகள் கூறியதாவது:–
 
சட்டமன்ற உறுப்பினர்களுடன் களுடன் ஸ்ரீரடி செல்ல வேண்டும் என்று விஜயகாந்த் ஏற்கனவே முடிவு செய்து இருந்தார். அதன்படியே அவர்கள் செல்கிறார்கள். இதற்கு எந்த காரணமும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.
ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img