இந்தியா மற்றும் மலேசியா இடையிலான பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் பிரதமர் மோடி

 
 
மலேசியா சென்று உள்ள பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் இந்தியா – மலேசியா இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்
 
பிரதமர் மோடி, மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த போது பிரதமர் மோடி பேசுகையில் பாதுகாப்பு துறையில் இந்தியா – மலேசியா இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று கூறினார்.
 
சிறந்த கடல் பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேலாண்மையில், இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவோம்,” என்றார். மேக் இன் இந்தியா மற்றும் சுமார்ட் சிட்டி திட்டங்களில் மலேசியாவின் ஒத்துழைப்பையும் இந்தியா கேட்டுக் கொண்டு உள்ளது.
 
தீவிரவாதத்திற்கு எதிராக போரிடும் நஜீப் ரசாக், தீவிரவாதம் மற்றும் மதம் இடையிலான தொடர்பை புறந்தள்ளிவிட்டு, இஸ்லாமின் உண்மையான மதிப்பை உயர்த்திஉள்ளார் என்று பிரதமர் மோடி பாராட்டிஉள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பில் உங்களுக்கு நான் கடமைப்பட்டு உள்ளேன், பாதுகாப்பு சவால்களை எதிர்க்கொள்வதில் நம்முடைய அர்ப்பணிப்பை இது கோடிட்டு காட்டுகிறது. இப்பகுதியில் நாம் தொடர்ந்து நம்முடைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம், என்று பிரதமர் மோடி கூறினார்.
 
மலேசியா மற்றும் இடையிலான இருநாட்டு நட்புறவை புதிய நிலைக்கு கொண்டுச்செல்லப்படும் என்று பிரதமர் மோடி தனது நம்பிக்கை தெரிவித்து உள்ளார். சைபர் பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் பொதுநிர்வாகம் ஆகியவற்றில் இருநாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிஉள்ளது.
 
நேற்று கோலாலம்பூரில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை எதிர்த்து போரிட உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தீவிரவாதம் என்பது இப்போது உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதத்துக்கு எல்லையே கிடையாது. தீவிரவாதம், தனக்கென ஆட்களை கூட்டிச்சேர்க்க மதத்தை பயன்படுத்துகிறது. ஆனால் எல்லா மதத்தினரையும் அது கொல்கிறது. தீவிரவாதத்தில் இருந்து மதத்தை நாம் விலக்க வேண்டும். மனித நேயத்தில் நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது மட்டும்தான் வேறுபாடு.
 
எந்த நாடும் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு துணை போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். தீவிரவாதிகளுக்கு புகலிடங்கள் கூடாது. நிதி கூடாது. ஆயுதங்கள் கூடாது. நான் ஏற்கனவே கூறியதையே மீண்டும் சொல்கிறேன். நமது காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை எதிர்த்து போரிட உலகமே ஒன்றுபட வேண்டும். உளவுத்தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும். படை பலத்தை பயன்படுத்த வேண்டும். ஒத்துழைப்பை பலப்படுத்த ஏற்ற வகையில் சர்வதேச சட்ட அமைப்பினை உருவாக்க வேண்டும். என்று மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories