இந்தியா மற்றும் மலேசியா இடையிலான பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் பிரதமர் மோடி

 
 
மலேசியா சென்று உள்ள பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் இந்தியா – மலேசியா இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்
 
பிரதமர் மோடி, மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த போது பிரதமர் மோடி பேசுகையில் பாதுகாப்பு துறையில் இந்தியா – மலேசியா இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று கூறினார்.
 
சிறந்த கடல் பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேலாண்மையில், இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவோம்,” என்றார். மேக் இன் இந்தியா மற்றும் சுமார்ட் சிட்டி திட்டங்களில் மலேசியாவின் ஒத்துழைப்பையும் இந்தியா கேட்டுக் கொண்டு உள்ளது.
 
தீவிரவாதத்திற்கு எதிராக போரிடும் நஜீப் ரசாக், தீவிரவாதம் மற்றும் மதம் இடையிலான தொடர்பை புறந்தள்ளிவிட்டு, இஸ்லாமின் உண்மையான மதிப்பை உயர்த்திஉள்ளார் என்று பிரதமர் மோடி பாராட்டிஉள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பில் உங்களுக்கு நான் கடமைப்பட்டு உள்ளேன், பாதுகாப்பு சவால்களை எதிர்க்கொள்வதில் நம்முடைய அர்ப்பணிப்பை இது கோடிட்டு காட்டுகிறது. இப்பகுதியில் நாம் தொடர்ந்து நம்முடைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம், என்று பிரதமர் மோடி கூறினார்.
 
மலேசியா மற்றும் இடையிலான இருநாட்டு நட்புறவை புதிய நிலைக்கு கொண்டுச்செல்லப்படும் என்று பிரதமர் மோடி தனது நம்பிக்கை தெரிவித்து உள்ளார். சைபர் பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் பொதுநிர்வாகம் ஆகியவற்றில் இருநாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிஉள்ளது.
 
நேற்று கோலாலம்பூரில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை எதிர்த்து போரிட உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தீவிரவாதம் என்பது இப்போது உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதத்துக்கு எல்லையே கிடையாது. தீவிரவாதம், தனக்கென ஆட்களை கூட்டிச்சேர்க்க மதத்தை பயன்படுத்துகிறது. ஆனால் எல்லா மதத்தினரையும் அது கொல்கிறது. தீவிரவாதத்தில் இருந்து மதத்தை நாம் விலக்க வேண்டும். மனித நேயத்தில் நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது மட்டும்தான் வேறுபாடு.
 
எந்த நாடும் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு துணை போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். தீவிரவாதிகளுக்கு புகலிடங்கள் கூடாது. நிதி கூடாது. ஆயுதங்கள் கூடாது. நான் ஏற்கனவே கூறியதையே மீண்டும் சொல்கிறேன். நமது காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை எதிர்த்து போரிட உலகமே ஒன்றுபட வேண்டும். உளவுத்தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும். படை பலத்தை பயன்படுத்த வேண்டும். ஒத்துழைப்பை பலப்படுத்த ஏற்ற வகையில் சர்வதேச சட்ட அமைப்பினை உருவாக்க வேண்டும். என்று மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories