இந்தியா மற்றும் மலேசியா இடையிலான பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் பிரதமர் மோடி

Published:

 
 
மலேசியா சென்று உள்ள பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் இந்தியா – மலேசியா இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்
 
பிரதமர் மோடி, மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த போது பிரதமர் மோடி பேசுகையில் பாதுகாப்பு துறையில் இந்தியா – மலேசியா இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று கூறினார்.
 
சிறந்த கடல் பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேலாண்மையில், இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவோம்,” என்றார். மேக் இன் இந்தியா மற்றும் சுமார்ட் சிட்டி திட்டங்களில் மலேசியாவின் ஒத்துழைப்பையும் இந்தியா கேட்டுக் கொண்டு உள்ளது.
 
தீவிரவாதத்திற்கு எதிராக போரிடும் நஜீப் ரசாக், தீவிரவாதம் மற்றும் மதம் இடையிலான தொடர்பை புறந்தள்ளிவிட்டு, இஸ்லாமின் உண்மையான மதிப்பை உயர்த்திஉள்ளார் என்று பிரதமர் மோடி பாராட்டிஉள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பில் உங்களுக்கு நான் கடமைப்பட்டு உள்ளேன், பாதுகாப்பு சவால்களை எதிர்க்கொள்வதில் நம்முடைய அர்ப்பணிப்பை இது கோடிட்டு காட்டுகிறது. இப்பகுதியில் நாம் தொடர்ந்து நம்முடைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம், என்று பிரதமர் மோடி கூறினார்.
 
மலேசியா மற்றும் இடையிலான இருநாட்டு நட்புறவை புதிய நிலைக்கு கொண்டுச்செல்லப்படும் என்று பிரதமர் மோடி தனது நம்பிக்கை தெரிவித்து உள்ளார். சைபர் பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் பொதுநிர்வாகம் ஆகியவற்றில் இருநாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிஉள்ளது.
 
நேற்று கோலாலம்பூரில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை எதிர்த்து போரிட உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தீவிரவாதம் என்பது இப்போது உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதத்துக்கு எல்லையே கிடையாது. தீவிரவாதம், தனக்கென ஆட்களை கூட்டிச்சேர்க்க மதத்தை பயன்படுத்துகிறது. ஆனால் எல்லா மதத்தினரையும் அது கொல்கிறது. தீவிரவாதத்தில் இருந்து மதத்தை நாம் விலக்க வேண்டும். மனித நேயத்தில் நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது மட்டும்தான் வேறுபாடு.
 
எந்த நாடும் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு துணை போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். தீவிரவாதிகளுக்கு புகலிடங்கள் கூடாது. நிதி கூடாது. ஆயுதங்கள் கூடாது. நான் ஏற்கனவே கூறியதையே மீண்டும் சொல்கிறேன். நமது காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை எதிர்த்து போரிட உலகமே ஒன்றுபட வேண்டும். உளவுத்தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும். படை பலத்தை பயன்படுத்த வேண்டும். ஒத்துழைப்பை பலப்படுத்த ஏற்ற வகையில் சர்வதேச சட்ட அமைப்பினை உருவாக்க வேண்டும். என்று மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img