திருவண்ணாமலையில்  மகா தீபம் ஏற்றப்பட்டது : லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்

Published:

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்பபட்டது.

மகா தீபத்தை திருவிழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கோபரணி தீபம் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒருபகுதியாக கடந்த நவம்பர் 21ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 22-ம் தேதி கொட்டும் மழையில் பெரிய தேரோட்டத்துடன் பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெற்றது.

மேலும் இன்று அதிகாலை 4 மணிக்கு தீபவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் கோயில் மூலவர் சன்னிதியில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இன்று மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. பல லட்சம் பக்தர்கள் குவிந்து ஏற்றப்பட்ட மகா தீபதரிசனம் செய்தனர் .

 

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img