பெண்களை மோசமான வார்த்தைகளால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசுவதாக சோனியாவிடம் விஜயதாரணி புகார்

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெண்களை மோசமான வார்த்தைகளால் பேசுவதாக சோனியாவிடம் விஜயதாரணி புகார் கூறி அவரை

தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கடிதம் எழுதியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவருமான விஜயதாரணி, மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளதால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

தமிழக காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் அவ்வப்போது மோதல் ஏற்படுவதும் சில நாட்கள் பரபரப்பாக இருப்பதும் வாடிக்கையானது. சில நேரங்களில் சண்டை சென்னையோடு நிற்காமல் பஞ்சாயத்துக்காக அந்த கட்சியினர் புது தில்லி வரை செல்லுவது வாடிக்கையானதே .

சமீபத்தில் கூட தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை மாற்றக்கோரி குமரி அனந்தன், ப.சிதம்பரம்,வசந்தகுமார், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்பட பலர் சோனியாவை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

தமிழக காங்கிரஸ் நிலைமையை பார்த்து சோனியா வெறுத்துப் போய், யாரை தலைவராக போட்டாலும் இப்படித்தானே புது தில்லிக்கு புகாருடன் வருகிறீர்கள் என்று கோவமாக கூறியுள்ளார். அடிக்கடி பிரச்சினை கிளம்புவதே தமிழக காங்கிரசின் சாபக்கேடு என்று தொண்டர்கள் தொடர்ந்து புலம்புகிறார்கள்.

தற்போது போது சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி மூலம் சர்ச்சை கிளம்பியுள்ளது.

விஜயதாரணி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியுள்ளதாவது :-

மகளிர் காங்கிரஸ் சார்பில் கடந்த 19 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியையொட்டி வைக்கப்பட்ட இந்திரா படம் போட்ட பேனரை இளங்கோவன் ஆதரவாளர்கள் அகற்றி ஆண்கள் கழிவறையில் வீசிச் சென்றனர். அதை நானே போய் எடுத்து வந்தேன்.

இளங்கோவன் தொடர்ந்து என்னையும், எனது ஆதரவாளர்களையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்படுகிறார். பெண்களை மோசமான வார்த்தைகளால் பேசி காயப்படுத்துகிறார். இது பெண் வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், இளங்கோவன் மட்டும் காங்கிரஸ் மீது பெண்கள் அதிருப்தி கொள்ளும் வகையில் செயல்படுகிறார். அவர் பதவியில் நீடிப்பது கட்சிக்கு களங்கம். கட்சியை காயப்படுத்தி விடும்.

எனது 28 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுவரை நான் யார் மீதும் குற்றம் சொன்னது கிடையாது. இப்போது நான் வேதனை அடைந்து இருக்கிறேன். எனவே இந்த விஷயத்தில் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக காத்து இருக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு விஜயதாரணி எழுதியுள்ள புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories