சுகாதாரத் துறை அமைச்சருடன் வாக்கு வாதம் செய்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம்

 

சுகாதாரத் துறை அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யபட்டுள்ளார்

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஃபதேதாபாத் மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைத் தீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், ஃபதேதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்தக்கூட்டத்தின்போது, ஃபதேதாபாத்தில் உள்ள கிராமத்தில் போதைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவது குறித்து காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியாவிடம் அமைச்சர் அனில் விஜ் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மாவட் காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியா, அந்தச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த 10 மாதங்களில் மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றதில் பொறுமை இழந்த சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியாவை ஒருமையில் கூறியுள்ளார்.இருந்த போதிலும் அங்கிருந்து வெளியேற சங்கீத் மறுத்துவிட்டார்.

அவர் மீது இருந்து கோபத்துடன் அமைச்சர் அனில் விஜ் அந்தக் கூட்டத்தை விடுத்து வெளியேறினார்.

அமைச்சர்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடையே நடைபெற்ற வாக்குவாதம், “வாட்ஸ் அப்’ மூலம் கைப்பேசிகளில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. பெண் அதிகாரியிடம் கண்ணியக்குறைவாக நடந்ததற்காக சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்ஜுக்கு பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கண்டனம் தொடந்ர்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஃபதேதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியா, அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்படுவதாக ஹரியாணா மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், சங்கீத் காலியா எந்தப் பொறுப்புக்கு எங்கு மாற்றப்பட்டுள்ளார் எனும் விவரத்தை சுற்றறிக்கையில்
கூறவில்லை .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

Topics

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories