தமிழகத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது : மத்திய அமைச்சர் நிதின் கத்கரி

 வெள்ளப்பாதிப்பினால் தமிழகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படாது என  கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கத்கரி தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னை மாநகரில் தாம்பரம்,  பெருங் களத்தூர், முடிச்சூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வரலாறு காணாத மழை யால்  கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.  50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தை விட பலமடங்கு தண்ணீர் வீடுகளில் புகுந்தது. இதனால் பலவீடுகளில் முதல் மாடி வரை தண்ணீரில்  முழ்கியது.  மீட்பு பணியில்  தீயணைப்பு வீரர்கள்,  தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல்படை ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் மீனவர்களும் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.

 வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை படகுகள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது. மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்களுக்கு ஹெலிகாபடர் மூலம் உணவு விநியோகம் செய்யபடுகிறது.

 வெள்ளத்தில் சிக்கிய சென்னைவாசிகளுக்கு உதவி செய்ய, அவர்களை மீட்க, நேற்று ராணுவத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. கப்பலில், மீட்பு பணிக்கு தேவையான பொருட்களுடன், இன்று காலை கடற்படையினர் சென்னை துறைமுகத்திற்கு வந்தனர். விமானப்படை சார்பில் 5க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது. இதில், இன்று, 2 ஹெலிகாப்டர்கள் மூலம், நகரின் பல பகுதிகளில் ஆய்வு செய்து, எங்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அங்கு உணவு பொட்டலங்களை வீசி வருகின்றனர்.

 மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு  பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெளி மாவட்டங்களில்  இருந்தும்  உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை சாலைமார்கமாக கொண்டு சென்று இலவசமாக  வழங்கி வருகின்றனர்.

 இந்த நிலையில் வெள்ளப்பாதிப்பினால் தமிழகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படாது என  கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கத்கரி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories