92,476 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தமிழகத்தில் பாதிப்பு : ஜெயலலிதா ஆளுநரிடம் விளக்கம்

Published:

 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேதங்கள் குறித்து, தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் ரோசய்யாவின் முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் 3 ஆயிரத்து 548 வருவாய் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 22 ஆயிர்தது 394 குடிசை வீடுகளும், 92 ஆயிரத்து 476 ஹெக்டேர் விவசாய நிலங்களும் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.

மேலும், நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளுக்குச் சொந்தமான 14 ஆயிரத்து 410 கிலோமீட்டர் நீளச் சாலைகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் மின்சார இணைப்புகளும், மின்பகிர்மான கருவிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் தெரிவித்துள்ளதாக ரமேஷ் சந்த் மீனா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img