அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் : குமுறும் மக்கள்

 
 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ளத்தால் 269 பேர் உயிரிழந்துள்ள தாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
 
லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.
 
இந்த நிலை ஏற்பட்டதிற்கு முக்கிய காரணமே பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்களே என பொதுமக்களின் குற்ற சாட்டு.
 
அரசியல்வாதிகள் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்க்க செய்த அட்டகாசத்தில் ஒன்றுதான் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு. தண்ணீர் செல்லும் பாதைகளையெல்லாம் அடைத்தும், குளங்கள், கண்மாய்களையெல்லாம் அழித்தும் பெரும் பணம் கொண்ட கூட்டத்திடம் வசூல் வேட்டை நடத்தி அந்த இடத்தை குடியிருப்பு பகுதிகளாக ஆக்க அரசாங்கத்தை ஆண்ட அதிகார வர்க்கத்தினர் அனுமதி அளித்தது முதல் தவறு. இதை விட பெரிய கொடுமை அரசாங்கமே கண்மாய்களையெல்லாம் குடியிருப்பு பகுதிகளாக ஆக்கி பொதுமக்களிடம் விற்றது.
 
தமிழகத்தில் கனிம வளங்களை தோண்டி நடைபெறும் முறைகேடுகளை கண்டும் காணாமலும் அரசாங்கம் இருந்தது போல் தண்ணீர் செல்லும், தேங்கும் இடங்களையெல்லாம் முறையாக பராமரிக்காததால் இயற்கை தற்போது ஒரு சரியான பாடத்தை தமிழக மக்களுக்கு புகட்ட காரணம் அரசியல்வாதிகள் தானாம் .
 
மேலும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்தது யார் என்றால் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து கொண்டு சென்று இலவசமாக வழங்கி சேவை செய்து வருகின்றனர்.
 
மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அணைத்து நலதிட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதாக மக்களால் பரவலாக பேசப்படுகிறது. மிக கொடுரமாக மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீதும் கூட முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி குமுறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் அரசியல் போன்று எவ்விதமான இலவச சுய விளம்பரமும் தேடி கொள்ள ஆசைப்படாமல் இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உதவிக்கரம் கொடுத்த அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளு தான் என்றால் மிகையல்ல.
 
தற்போது கூட பேரிடர்குழு மற்றும் முப்படையினர் கொண்டு வந்த உணவு பொருட்களைத்தான் ஹெலிகாப்டர் மூலம் கொடுத்துள்ளது. அதிகமான மழை காலங்களில் மின்சார இணைப்பைக்கூட துண்டிக்க உத்தரவிடாமல் அரசு மெத்தனமாக செயல் பட்டதால் தமிழக மக்களை பலி கொடுத்ததுதான் மிச்சம் என்றும் மக்களால் பரவலாக பேசப்படுகிறது.
 
வெளி மாவட்டங்களில் இருந்துகூட வந்து தேர்தல் நேரத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் வாக்குகளை பெற தமிழகத்தில் சுற்றி திரிந்த அனைத்து அரசியல் கட்சியினரும் தற்போது எங்கே போனார்கள்? வாக்குகளை பெற சுற்றி திரியும் அரசியல் கட்சியினர் அனைவரும் தற்போது வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் முகாமிட்டு சேவை செய்வதுதானே? ஏன் கரைவேட்டிகள் தலைமறைவு ஆக வேண்டும் என்கிற சர்ச்சை குமுறல் தமிழகத்தில் ஒலிக்க கிளம்பியுள்ளது.
 
வானிலை ஆராய்ச்சி மையம் அடிக்கடி கனமமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்தும் மத்திய அரசிடம் உடனடியாக ராணுவ உதவியை கேட்க அரசாங்கம் தயக்கம் காட்டியது ஏன்? மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசாங்கம் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றக் கூட முடியாதா? பேரிடர் படையினர் முன்கூட்டியே வருகை தந்து இருந்தால் மழை நின்ற மூன்று நாட்களில் நடைபெற்ற சில அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கும்.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் எந்த உதவியும் செய்யவில்லை என்பதுதான் பொதுமக்களின் குற்றச் சாட்டு. தற்போதுள்ள ஆளும் கட்சியை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெயர் அளவில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ஊடகங்கள் வாயிலாக தலையை காட்டிவிட்டு அவர்களும் தலைமறைவு ஆகிவிட்டனர். மேலும் முதன்முதலில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகு மூலம் காக்க முயற்சி செய்ததும் தனியார் அமைப்புதான்.
 
பொதுநல நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்ளையடிக்க சுற்றி திரியும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக அவர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு கரைவேட்டி கொள்ளையர்களின் புகழை ஊடகங்களின் வாயிலாக பரப்பி வருவதாகவும் பலரால் கூறப்படுகிறது.
 
வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க அரசியல் கட்சியினர் முன்வராமல் தலைமறைவு ஆகிவிட்டனர்.
 
இந்த நிலையில் வெள்ள பாதிப்படைந்து தவித்து வருவபவர்கள் அரசியல்வாதிகள் மீது வெறுப்படைந்தது அரசியல் கட்சியினர் ஓட்டுகேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் என்றும் காணொளி குமுறி அவர்களின் எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளனர்.
 
வெள்ள பாதிப்படைந்தவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவர் மீதும் பெருத்த கோபம் கொண்டு இந்த செய்தியில் பதிவிடமுடியாத வார்த்தை சொற்களை பயன்படுத்தி அதை காணொளியாக பதிவு செய்து வாட்ஸ்ஆப்பில் வைரலாக
பரவிட்டுள்ளனர்.
 
வைரலாக பரவிவரும் அந்த காணொளி dhinasari.com வாசகர்களின் பார்வைக்காக இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
 
 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories