எச்சரிக்கை செய்திகள் எதற்காக?

 

ஈக்காட்டுத்தாங்கல் – இக்காட்டில் தங்கல் என்பதன் மருவு என்று ஒரு முறை கூறியிருந்தேன். அவ்வாறு காட்டில் தங்கல் என்பதாக ஆகிவிட்டதோ எனும்படி அடையாற்றின் கரையோரம் ஆகிவிட்டிருந்தது.

அலுவலகம் சென்று வெள்ள நீரின் ஆக்ரோஷத்தால் சந்தித்த இழப்புகளைப் பார்த்து மனம் வருந்தியபடியே அடுத்துள்ள குடியிருப்புகளுக்குச் சென்று பார்த்தேன். காசி திரையரங்கு தொடங்கி இடதுபுறம் ராமாபுரம் நோக்கிச் செல்லும் ஒரு நீண்ட சிறு சாலைக்கும் அடையாற்றுக்கும் இடையே எத்தனை குறுக்குச் சாலைகள்! எல்லா வீடுகளின் தரைத் தளங்களிலும் கரை கடந்த ஆற்று நீர் தஞ்சம் புகுந்திருந்தது. குடிசைகள், மாடிக் கட்டடங்கள், பலசரக்குக் கடைகள், பெட்டிக் கடைகள் எல்லாம்தான்!

ஒவ்வொரு வீட்டின் முன்னும் பொத்திப் பொத்திப் பாதுகாத்த ஷோபா, பெட், தலையணைகள், துணிமணிகள் என… எல்லாம் குப்பைகளாய்க் குவிந்திருந்தன. ஆற்று நீர் சேற்றையும் சாக்கடையையும் சேர்த்து அங்கே தள்ளியிருந்ததால்… துர்நாற்றம், சகதி.

வீடுகள் பலவும் பூட்டப்பட்டிருந்தன. பலர் வெளியூர்களுக்குச் சென்றிருந்தார்கள். தெருக்கள் பலவும் வெறிச்சோடிக் கிடந்தன.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

சென்னையில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் எம்ப்டன் குண்டு போடப்போகிறார்கள் என்று வதந்தி பரவி, ஒட்டுமொத்த சென்னையே அச்சத்தால் வெளியேறியதைப் போன்ற நிலைமை இது!

காரணத்தை அங்கிருந்த பெண்மணிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது புரிந்துகொண்டேன்.

டிசம்பர் 2 வெள்ளம் வந்துள்ளது. மறுநாள் மாலை ஓரளவு வடிந்துள்ளது. சிலர் தங்கள் வீட்டின் விலையுயர்ந்த பொருள்களை மேல்மாடிகளில் அங்கும் இங்கும் வைத்து எடுத்து ஏதோ பாதுகாத்து வந்துள்ளனர்.

திடீரென 4ம் தேதி ஒரு பெண்மணி நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு… தெருவின் முனையில் இருந்து தெரு முழுக்க ஓடி வந்திருக்கிறார். செம்பரம்பாக்கம் ஏரி உடைஞ்சிடுச்சாம்.. நாம எல்லாரும் செத்தோம். வீட்டின் ஒரு கல்லு கூட மிஞ்சாது. எல்லாம் அடிச்சிட்டு போகப்போவுது… ஐயோ அம்மா என்று குய்யோமுறையோ என கத்திக் கொண்டு சென்றுள்ளார். அந்தக் கூக்குரல் அங்கிருந்தவர்களின் ஈரக்குலையை பதம்பார்த்து நெஞ்சத்தில் திகிலூட்டியுள்ளது. அடுத்த நிமிடமே எல்லாரும் அடித்துப் புரண்டு ராமாவரம் செல்லும் மேடான அந்த சாலைக்கு ஓடியுள்ளனர். அங்கே ஏற்கெனவே ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடி நின்று அலறிக் கொண்டிருந்தனராம்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

இந்த சந்தடி சாக்கில் திருட்டு கும்பல் ஒன்று வீடுகளுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கியதாம். இதை கவனித்து விட்ட இளைஞர்கள் சிலரின் விரட்டலில் நிலைமை ஒருவாறு சரியாகியுள்ளது.

இதே போன்ற கலவர நிலவரம் சைதாப்பேட்டையிலும் நடந்துள்ளது. திருட்டு கும்பல் கட்டி விட்ட கதை, ஏதோ எச்சரிக்கை மணி அடிப்பது போல் பரப்பப் பட்டுள்ளது..

அது ஜாபர்கான்பேட்டை! கரண்ட் இல்லை, தண்ணி இல்லை, குளித்து 5 நாளாச்சு, போன் இல்லை, ஒரே சகதி. துர்நாற்றம். கொசுக்கடி, யாருமே வந்து பாக்கல தம்பி. ஏதோ புள்ளைங்க போய் சாப்பாடு பெட்ஷீட்டு வாங்கிட்டு வருதுங்க… என்று என்னைக் கண்டதும் புலம்பினார் ஒரு பெண்மணி. அங்கங்கே ராணுவ வீரர்கள், போலீஸார், மாநகராட்சியினர், தொண்டு செய்யும் இளைஞர்கள் என… வண்டிகளில் சாப்பாடு, குடிநீர், பிஸ்கட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தனர். நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டது ஓரிரு இடங்களில். குப்பைகளை அகற்ற சேலம், ஈரோடு என மற்ற மாநகராட்சி வண்டிகள் பேனர்கட்டி அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தன. ஏ.டி.எம்.களில் வரிசை நீண்டிருந்தது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

வீடுகளை பலர் தாற்காலிகமாக பூட்டிக் கொண்டு காலி செய்துவிட்டிருக்கிறார்கள். இருப்பினும் சிலர் வேறு வழியின்றி மேல் மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கே.கே.நகர் செல்லும் சாலையில் முக்குக்கு முக்கு மட்டுமல்ல… வீட்டுக்கு வீடு குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன. மூட்டை மூட்டையாய் அரிசி, பருப்பு, கோதுமை… பல இடங்களில் அவை சாலையில் சிதறிக் கிடந்ததைப் பார்த்தபோது மனம் வலித்தது.

எத்தனை எச்சரிக்கை அறிவிப்புகள்! வானிலை ஆய்வு மையம் அலறிக் கொண்டிருந்தும், முன் எச்சரிக்கையாய் இருப்பதில் கோட்டை விட்டுவிட்டோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories