அதிமுக., எம்.எல்.ஏ.க்கள்., தங்கள் 1 மாத சம்பளத்தை நிவாரணத்துக்கு வழங்குவர்: ஜெயலலிதா

Published:

சென்னை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் நிவாரணப் பணிகளில் உதவ, அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்குவர் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் ஏற்பட் டிருக்கும் கடுமையான மழை வெள்ள சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு தேவை யான அனைத்து உதவிகளை யும் செய்கின்றன பெரும் பணியில் எனது தலைமை யிலான அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறது.

வரலாறு கண்டிராத வகையிலும், திடீரென்றும் ஏற்பட்ட அரிதினும் அரிதான இந்த மழையும் வெள்ளப் பெருக்கும் தமிழகத் தில் ஏற்படுத்தி இருக்கும் இழப்புகள் ஏராளம்.

நிவாரணப் பணிகளில் எல்லோரும் பங்கேற்கும் வகையில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற பொருள் உதவியையும், உடல் உழைப் பையும் வழங்கி வருகின்றனர் என்ற செய்தி பல இடங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

நிவாரண பணிகளில் தன்னலமின்றி ஈடுபட்டி ருக்கும் அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டும்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கு எல்லாம் இந்த மக்கள் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இந்த பணியில் பங்கு பெற்று ஆற்றி வரும் கடமைகளில் ஒன்றாக கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது 1 மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அன்பு சகோதரி யாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன். கலங்காதீர்கள். என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களை பற்றியதாகவே இருக்கிறது. இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img