கத்தியைக் காட்டி இளைஞரிடம் ரூ.7 லட்சம் வழிப்பறி; வேடிக்கை பார்த்த மக்கள்!

புதுச்சேரி பெரியார் நகர் பகுதியில் 7 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த 3 பேர்; சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு ரெடியார்பாளையம் போலீசார் விசாரணை!

காஞ்சிபுரம் மதுராந்தகத்தைச் சேர்ந்த தனியார் மருந்து நிறுவன ஊழியர் பால சுப்பிரமணியம். இவர் தனது நிறுவனத்தின் மூலம் கொடுக்கப்பட்ட மருந்திற்கு தேவையான பணத்தை வாரம் ஒருமுறை இங்கு வந்து வசூல் செய்து கொண்டு சென்று வந்துள்ளார்.

அதன்படி நேற்று காலை புதுச்சேரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்த அவர் பல்வேறு மருந்துக் கடைகளில் இருந்து பணத்தை வசூலித்துக் கொண்டு இரவு 10 மணியளவில் தந்தை பெரியார் நகர் வழியாக வந்துள்ளார் .

அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 7 லட்சத்தை வழிப்பறி செய்து சென்றது.

சிசிடிவி பதிவில் அவர் தன்னிடம் உள்ள பணத்தை காப்பற்றப் போராடியுள்ளார். ஆனால் கத்தியை வைத்து அவரை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு மூவரும் தப்பியோடினர்.

மூன்று பேரில் ஒருவன் கத்தியை வைத்து அவரை பலமாகத் தாக்கியும் அவர் பணப் பையை விடவில்லை. கடுமையாகத் தாக்கியதால் அவர் பையை விட்டுவிடுகின்றார். இதனை அடுத்து 7 லட்சம் ரூபாய் பணத்துடன் மூவரும் தப்பிச் செல்கின்றனர்.

இதனை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். இதனை அடுத்து பாலசுப்ரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிசிடிவி காட்சிகளை கொண்டு ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories