கத்தியைக் காட்டி இளைஞரிடம் ரூ.7 லட்சம் வழிப்பறி; வேடிக்கை பார்த்த மக்கள்!

புதுச்சேரி பெரியார் நகர் பகுதியில் 7 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த 3 பேர்; சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு ரெடியார்பாளையம் போலீசார் விசாரணை!

காஞ்சிபுரம் மதுராந்தகத்தைச் சேர்ந்த தனியார் மருந்து நிறுவன ஊழியர் பால சுப்பிரமணியம். இவர் தனது நிறுவனத்தின் மூலம் கொடுக்கப்பட்ட மருந்திற்கு தேவையான பணத்தை வாரம் ஒருமுறை இங்கு வந்து வசூல் செய்து கொண்டு சென்று வந்துள்ளார்.

அதன்படி நேற்று காலை புதுச்சேரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்த அவர் பல்வேறு மருந்துக் கடைகளில் இருந்து பணத்தை வசூலித்துக் கொண்டு இரவு 10 மணியளவில் தந்தை பெரியார் நகர் வழியாக வந்துள்ளார் .

அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 7 லட்சத்தை வழிப்பறி செய்து சென்றது.

சிசிடிவி பதிவில் அவர் தன்னிடம் உள்ள பணத்தை காப்பற்றப் போராடியுள்ளார். ஆனால் கத்தியை வைத்து அவரை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு மூவரும் தப்பியோடினர்.

மூன்று பேரில் ஒருவன் கத்தியை வைத்து அவரை பலமாகத் தாக்கியும் அவர் பணப் பையை விடவில்லை. கடுமையாகத் தாக்கியதால் அவர் பையை விட்டுவிடுகின்றார். இதனை அடுத்து 7 லட்சம் ரூபாய் பணத்துடன் மூவரும் தப்பிச் செல்கின்றனர்.

இதனை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். இதனை அடுத்து பாலசுப்ரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிசிடிவி காட்சிகளை கொண்டு ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories