மாநிலங்களவையை சுமுகமாக நடத்த உடன்பாடு: அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு

புது தில்லி:
மாநிலங்களவையை சுமுகமாக நடத்த தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையை நடத்துவதில் இதுவரை நீடித்துவந்த முட்டுக்கட்டை விலகியுள்ளதாகக் கருதப் படுகிறது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நவ. 29 அன்று தொடங்கியது. கூட்டத் தொடர் துவங்கியது முதல், தாத்ரி சம்பவத்தை வைத்து, சகிப்பின்மை விவகாரத்தை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து பிரச்னை எழுப்பின. இதனால் இரு அவைகளும் கூச்சல் குழப்பத்துடன் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கிப் போயின.

இதனிடையே நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராக தில்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பிய விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கின. இதனால் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் தொடர்ந்தது.

இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்தது. நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர், வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலங்களவையை சுமுகமாக நடத்தும் நோக்கிலும், முக்கிய மசோதாவை நிறைவேற்ற கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரி தலைமையில் தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவையை சுமுகமாக நடத்தவும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்தன. முக்கியமாக, எஸ்சி/எஸ்டி (அடக்குமுறைகளில் இருந்து பாதுகாப்பு) திருத்த மசோதா, கடத்தலுக்கு எதிரான திருத்த மசோதா, அணுசக்தி திருத்த மசோதா, வர்த்தக நீதிமன்றங்கள் சிறப்புச் சட்ட மசோதா, சமரசத் தீர்வு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories