பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு இந்தியாவுக்கு எதிராக பேச தடை : நவாஸ் ஷெரீப்

Published:

பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு இந்தியாவுக்கு எதிராக எதிராக எந்த கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று தடை உத்தரவிட்டுள்ளார். இந்தியாவுடனான அமைதி நடவடிக்கை தடைபடாமல் இருக்க அந்நாட்டுக்கு எதிராக பேசக்கூடாது என்று தனது அமைச்சர்களை நவாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
 
பாகிஸ்தான் தினசரி பத்திரிக்கையான தி நேஷன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது:-
 
கடந்த காலங்களில் செய்தது போல அல்லாமல் இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்று தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் பிரதமர் நவாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
அதேபோல், இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் பேச வேண்டும் என்று டெல்லியில் இருந்து சில தலைவர்கள் அறிக்கைகள் விடுவதால், எரிச்சல் அடைந்துள்ள நவாஸ் ஷெரீப், இருந்த போதிலும் இந்திய அரசின் கொள்கை இது இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
அண்மையில் பாரீஸில் நடைபெற்ற பருவ நிலை உச்சி மாநாட்டின் போது நவாஸ் ஷெரீப், பிரதமர் மோடிசந்திப்புக்கு பிறகு இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 
கடந்த டிசம்பர் 8-ம் தேதி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். வரும் ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்ற மாநாட்டின் போது மோடி- நவாஸ் ஷெரீப் ஆகியோர் மீண்டும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறப்படுகிறது
ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img