கேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு!

nellai shop owners - 2026

நெல்லை: பெருமழை, வெள்ளத்தால் சீரழிந்துள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக, நெல்லை மாவட்டத்தின் தாலுகா வாரியாக, பொருள்கள் சேகரிக்கப் படுகின்றன.

கேரள மாநில வெள்ள நிவாரணமாக திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ரூ.1,81,000/- மதிப்பிலான ஜவுளிகள் (பெட்ஷிட், லுங்கி, நைட்டி, டவல், சிறுவர் சிறுமியர் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள்) மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஞாயிற்றுக் கிழமை இன்று ஒப்படைக்கப்பட்டது.

இதுபோல், என்னென்ன பொருள்கள் தேவை என்பது குறித்த பட்டியலை வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அனுப்பி, தென்காசி செங்கோட்டை தாலுகா அலுவலகங்களில் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப் படுகிறது. இது குறித்து விடுக்கப் பட்ட வேண்டுகோளில்…

தற்சமயம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நமது அண்டை மாநிலமான கேரளாவிற்கு தேவையான அத்தியவாசிய நிவாரணப் பொருள்களை பொது மக்களாகிய நாமும் அனுப்ப கடமை பட்டுள்ளோம்.

முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் 18-8-2018 முதல்  தினமும் காலையில் 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் கேரள அரசிடம் ஒப்படைக்க செல்கிறது
கீழே பட்டியலிடப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை அதிக எண்ணிக்கையில் சேகரித்து அனுப்ப ஏதுவாக பொதுமக்கள் தங்களின் பங்களிப்பினை நல்குமாறும், மேலும், பயன்படுத்திய ஆடைகள், செருப்புகள், காலாவதியான பொருட்கள், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான பொருட்கள் வழங்குவதை முற்றிலுமாக தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. குடிநீர் பாட்டில்கள் (1/2/5 லிட்டர்)
2. குளியல்சோப்/துணிதுவைக்கும்சோப்/பவுடர்
3. கொசுவர்த்திசுருள்/கொசுவிரட்டி
4. மெழுவர்த்தி/தீப்பெட்டி
5. தலையணை/போர்வை
6. டீதூள்/காபிதூள்
7. பால்பவுடர்
8. பேபிடையபர்
9. சானிட்ரி நாப்கின்
10. செருப்புகள் (ஆண்/பெண்/குழந்தை)
11. சேலைகள் / நைட்டி / பவாடை
12. லுங்கி / வேஷ்டி/ சட்டைகள்
13. உள்ளாடைகள் (ஆண்/பெண்/குழ)
14. குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான இதர துணி வகைகள்
15. உப்பு சர்க்கரை கரைசல் / ELECTROLYTE
16. அரிசி
17. மாவு (கோதுமை/மைதா/ரவா/அரிசி)
18. நிலக்கடலை / பயிறு வகைகள்
19. தேங்காய்எண்ணெய்
20. ரஸ்க் / பிஸ்கட்
21. டார்ச் / பேட்டரி

*சேகரிக்கப்படும் இடம் Town Hall  செங்கோட்டை

*சேகரிக்கப்படும் இடம் வட்டாட்சியர் அலுவலகம், தென்காசி
குறிப்பு:- பயன்படுத்திய ஆடைகள், செருப்புகள் வழங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்

இதுபோல் வீ.கே.புதூர் தாசில்தார் நல்லையாவும் வீகே புதூர் தாலுகா அலுவலகத்தில் வந்து நேரில் தாராளமாக வழங்கி கேரள மக்களின் துயரில் தோள் கொடுப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories