December 5, 2025, 7:36 PM
26.7 C
Chennai

கேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு!

nellai shop owners - 2025

நெல்லை: பெருமழை, வெள்ளத்தால் சீரழிந்துள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக, நெல்லை மாவட்டத்தின் தாலுகா வாரியாக, பொருள்கள் சேகரிக்கப் படுகின்றன.

கேரள மாநில வெள்ள நிவாரணமாக திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ரூ.1,81,000/- மதிப்பிலான ஜவுளிகள் (பெட்ஷிட், லுங்கி, நைட்டி, டவல், சிறுவர் சிறுமியர் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள்) மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஞாயிற்றுக் கிழமை இன்று ஒப்படைக்கப்பட்டது.

இதுபோல், என்னென்ன பொருள்கள் தேவை என்பது குறித்த பட்டியலை வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அனுப்பி, தென்காசி செங்கோட்டை தாலுகா அலுவலகங்களில் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப் படுகிறது. இது குறித்து விடுக்கப் பட்ட வேண்டுகோளில்…

தற்சமயம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நமது அண்டை மாநிலமான கேரளாவிற்கு தேவையான அத்தியவாசிய நிவாரணப் பொருள்களை பொது மக்களாகிய நாமும் அனுப்ப கடமை பட்டுள்ளோம்.

முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் 18-8-2018 முதல்  தினமும் காலையில் 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் கேரள அரசிடம் ஒப்படைக்க செல்கிறது
கீழே பட்டியலிடப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை அதிக எண்ணிக்கையில் சேகரித்து அனுப்ப ஏதுவாக பொதுமக்கள் தங்களின் பங்களிப்பினை நல்குமாறும், மேலும், பயன்படுத்திய ஆடைகள், செருப்புகள், காலாவதியான பொருட்கள், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான பொருட்கள் வழங்குவதை முற்றிலுமாக தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. குடிநீர் பாட்டில்கள் (1/2/5 லிட்டர்)
2. குளியல்சோப்/துணிதுவைக்கும்சோப்/பவுடர்
3. கொசுவர்த்திசுருள்/கொசுவிரட்டி
4. மெழுவர்த்தி/தீப்பெட்டி
5. தலையணை/போர்வை
6. டீதூள்/காபிதூள்
7. பால்பவுடர்
8. பேபிடையபர்
9. சானிட்ரி நாப்கின்
10. செருப்புகள் (ஆண்/பெண்/குழந்தை)
11. சேலைகள் / நைட்டி / பவாடை
12. லுங்கி / வேஷ்டி/ சட்டைகள்
13. உள்ளாடைகள் (ஆண்/பெண்/குழ)
14. குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான இதர துணி வகைகள்
15. உப்பு சர்க்கரை கரைசல் / ELECTROLYTE
16. அரிசி
17. மாவு (கோதுமை/மைதா/ரவா/அரிசி)
18. நிலக்கடலை / பயிறு வகைகள்
19. தேங்காய்எண்ணெய்
20. ரஸ்க் / பிஸ்கட்
21. டார்ச் / பேட்டரி

*சேகரிக்கப்படும் இடம் Town Hall  செங்கோட்டை

*சேகரிக்கப்படும் இடம் வட்டாட்சியர் அலுவலகம், தென்காசி
குறிப்பு:- பயன்படுத்திய ஆடைகள், செருப்புகள் வழங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்

இதுபோல் வீ.கே.புதூர் தாசில்தார் நல்லையாவும் வீகே புதூர் தாலுகா அலுவலகத்தில் வந்து நேரில் தாராளமாக வழங்கி கேரள மக்களின் துயரில் தோள் கொடுப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories