டெங்குவுக்கு காரணம்… சுகாதாரத் துறையா?

dengue musquto - 2026

டெங்குவிற்கு காரணம் சுகாதாரத்துறை அல்ல! டெங்குவிற்குக் காரணம் கொசுக்கடி. கொசுக்கடிக்கு காரணம் கொசு உற்பத்தி . தண்ணீர், நன்னீர் தேங்கி நிற்பது கொசு உற்பத்திக்குக் காரணமாகும்.

தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவது, மீண்டும் தேங்காமல் இருக்கச் செய்வது யார் பொறுப்பு? சுகாதாரத்துறையின் பொறுப்பா? இல்லை!  இல்லை!!

சர்கார் படத்தில் டெங்குவைத் தடுக்க வேண்டிய பொறுப்பு பொதுப்பணித் துறையின் வேலை என்கிறார் நாயகன். அதை மறுத்து நெட்டிசன்கள் டெங்குவைத் தடுப்பது சுகாதாரத்துறையின் வேலை என்று சமூக வலைத் தளத்தில் எழுதுகிறார்கள்.

ஏற்கனவே சமூகத்தில் பொதுப்புத்தியில் அப்படித்தான் பதிந்துள்ளது. கொசு உற்பத்தியைத் தடுப்பது உண்மையிலேயே உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டிய வேலை. தண்ணீர் தேங்கி நிற்பது, டயர்கள் பானைகள் தொட்டிகள் நெகிழிப்பைகள், கப்புகள் இவற்றில் தேங்கும் நன்னீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதும், உற்பத்தியாகாமல் தடுப்பதும் உள்ளாட்சி அமைப்புகளின் வேலை.

அது போலவே சாக்கடை போன்ற தூய்மையற்ற நீரில் உருவாகும் பிற கொசுக்களை( இவை மலேரியா, யானைக்கால் நோயை பரப்புபவை) உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டியதும் உள்ளாட்சி அமைப்புகள் வேலை தான். அதுபோல சுத்தமான குடிநீர் வழங்கி தண்ணீர் மூலமாக பரவுகின்ற நோய்களை பரவாமல் தடுக்கும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் வேலைதான்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

எல்லா நாடுகளிலும், நம் தமிழ்நாடு உட்பட இது தான் செயல்முறை. ஆனால், கொசு ஒழிப்புப் பணியில் 100 விழுக்காடு சுகாதாரத்துறை இழுத்து விடப்பட்டுள்ளது.

கெடுவாய்ப்பாக டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு காரணமான பழி சுகாதாரத் துறையின் மீது ஒட்டுமொத்தமாக விழுகின்றது. டாக்டர்கள் சமூகப் பொது புத்தியில் வில்லன்கள் ஆக்கப்படுகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகள் தான் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்று செயல்பட வேண்டும்.
கொசுக்களை ஒழிக்கும் பணிக்கு தடுப்பு மருத்துவத் துறை டெக்னிக்கல் வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கும். ஆனால் களத்தில் பணிகளைச் செய்ய வேண்டிய ஆள்பலம் , நிதி ஆதாரம் எல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கே உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளை முடுக்கி விடாமல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் ஊருக்கு நான்கு மஸ்தூர்களை ( தினக்கூலிப் பணியாளர்) அனுப்பி வேலை செய்ய வைத்தால் கொசு இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் ஒழியாது.
டெங்குவும் ஒழியாது.

பல துறைகள் இணைந்து செயல்பட வேண்டிய கொசு ஒழிப்பு பணியை டெங்கு ஒழிப்புப் பணியினை, (பழியினையும்) ஒட்டுமொத்த மாக சுகாதாரத்துறையின் மீது திணிப்பது உண்மையிலேயே டெங்குவை ஒழிக்க உதவாது.

ALSO READ:  பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

Sugavanam: Msg shared by Dr. Kamatchi

©Voice of Govt. Doctors, Tamil Nadu

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories