December 4, 2025, 3:35 PM
25.8 C
Chennai

டெங்குவுக்கு காரணம்… சுகாதாரத் துறையா?

dengue musquto - 2025

டெங்குவிற்கு காரணம் சுகாதாரத்துறை அல்ல! டெங்குவிற்குக் காரணம் கொசுக்கடி. கொசுக்கடிக்கு காரணம் கொசு உற்பத்தி . தண்ணீர், நன்னீர் தேங்கி நிற்பது கொசு உற்பத்திக்குக் காரணமாகும்.

தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவது, மீண்டும் தேங்காமல் இருக்கச் செய்வது யார் பொறுப்பு? சுகாதாரத்துறையின் பொறுப்பா? இல்லை!  இல்லை!!

சர்கார் படத்தில் டெங்குவைத் தடுக்க வேண்டிய பொறுப்பு பொதுப்பணித் துறையின் வேலை என்கிறார் நாயகன். அதை மறுத்து நெட்டிசன்கள் டெங்குவைத் தடுப்பது சுகாதாரத்துறையின் வேலை என்று சமூக வலைத் தளத்தில் எழுதுகிறார்கள்.

ஏற்கனவே சமூகத்தில் பொதுப்புத்தியில் அப்படித்தான் பதிந்துள்ளது. கொசு உற்பத்தியைத் தடுப்பது உண்மையிலேயே உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டிய வேலை. தண்ணீர் தேங்கி நிற்பது, டயர்கள் பானைகள் தொட்டிகள் நெகிழிப்பைகள், கப்புகள் இவற்றில் தேங்கும் நன்னீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதும், உற்பத்தியாகாமல் தடுப்பதும் உள்ளாட்சி அமைப்புகளின் வேலை.

அது போலவே சாக்கடை போன்ற தூய்மையற்ற நீரில் உருவாகும் பிற கொசுக்களை( இவை மலேரியா, யானைக்கால் நோயை பரப்புபவை) உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டியதும் உள்ளாட்சி அமைப்புகள் வேலை தான். அதுபோல சுத்தமான குடிநீர் வழங்கி தண்ணீர் மூலமாக பரவுகின்ற நோய்களை பரவாமல் தடுக்கும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் வேலைதான்.

எல்லா நாடுகளிலும், நம் தமிழ்நாடு உட்பட இது தான் செயல்முறை. ஆனால், கொசு ஒழிப்புப் பணியில் 100 விழுக்காடு சுகாதாரத்துறை இழுத்து விடப்பட்டுள்ளது.

கெடுவாய்ப்பாக டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு காரணமான பழி சுகாதாரத் துறையின் மீது ஒட்டுமொத்தமாக விழுகின்றது. டாக்டர்கள் சமூகப் பொது புத்தியில் வில்லன்கள் ஆக்கப்படுகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகள் தான் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்று செயல்பட வேண்டும்.
கொசுக்களை ஒழிக்கும் பணிக்கு தடுப்பு மருத்துவத் துறை டெக்னிக்கல் வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கும். ஆனால் களத்தில் பணிகளைச் செய்ய வேண்டிய ஆள்பலம் , நிதி ஆதாரம் எல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கே உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளை முடுக்கி விடாமல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் ஊருக்கு நான்கு மஸ்தூர்களை ( தினக்கூலிப் பணியாளர்) அனுப்பி வேலை செய்ய வைத்தால் கொசு இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் ஒழியாது.
டெங்குவும் ஒழியாது.

பல துறைகள் இணைந்து செயல்பட வேண்டிய கொசு ஒழிப்பு பணியை டெங்கு ஒழிப்புப் பணியினை, (பழியினையும்) ஒட்டுமொத்த மாக சுகாதாரத்துறையின் மீது திணிப்பது உண்மையிலேயே டெங்குவை ஒழிக்க உதவாது.

Sugavanam: Msg shared by Dr. Kamatchi

©Voice of Govt. Doctors, Tamil Nadu

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

திரும்பிய பக்கமெல்லாம் திமுக., அரசின் போலீஸ்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!

இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

திரும்பிய பக்கமெல்லாம் திமுக., அரசின் போலீஸ்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!

இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்!

அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது

திருப்பரங்குன்றம்; பட்டாபிஷேகம் முடிந்தது, மழையும் வெளுத்து வாங்கியது!

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!

அறவழியில் போராடி திருப்பரங்குன்றம் உரிமையை மீட்டுக் கொடுப்போம்; எஸ்.ஜே. சூர்யா

மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,

Entertainment News

Popular Categories