கருணாநிதி மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்! ஸ்டாலினிடம் வழங்கிய மாநில நிர்வாகிகள்!

Published:

rss men met stalin - 2026

சமீபத்தில் நடந்த RSS அகில பாரத கூட்டத்தில் இந்த ஆண்டு காலமான முக்கிய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான #கருணாநிதிக்கும் இரங்கற்பா தெரிவிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய கூட்டத்தில், மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தப் பட்டது. கூட்டத்தில் இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்கப் பட்டு, இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.

இந்தத் தீர்மானத்தை தமிழ்நாடு மாநில ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வழங்கினர்.

நவ.12 இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் கே.குமாரசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சாம்பமூர்த்தி, மாநில அமைப்பாளர் பூ.மு. ரவிக்குமார் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.

இதனை திமுக., தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img