January 19, 2025, 3:48 AM
24.7 C
Chennai

ஆந்திர படுகொலை: பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

திருப்பதி: ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஏற்கெனவே பலரும் கூறி வரும் நிலையில், அதனை உறுதி செய்வது போல், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர வனப் பகுதியில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சிறப்புப் படையினர் மற்றும் வனத்துறையினர் மீது செம்மரக் கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டதாக ஆந்திர போலீஸார் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், அவர்களின் கூற்றுக்கு மாறாக பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியாகின. தொழிலாளர்களின் முக்கிய உறுப்புகளில் குண்டுகள் துளைத்திருப்பது தெரிய வந்துள்ளது. மிக அருகிலிருந்து போலீஸார் சுட்டதே இதற்குக் காரணமாம். மேலும், தொழிலாளி ஒருவரின் மார்பில் 2 குண்டுகளும், முதுகில் 4 குண்டுகளும் துளைத்திருப்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வேண்டுமென்றே தொழிலாளர்களை போலீஸார் கண்மூடித்தனமாக சுட்டதாக புகார் எழுந்துள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ஆந்திர மாநில காவல்துறை மறுத்துள்ளது. இதனிடையே பேருந்தில் சென்றவர்களைக் கைது செய்து வனப் பகுதியில் அவர்களை வைத்து போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ALSO READ:  ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.