திருவண்ணாமலையை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்த லண்டன் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை

 
திருவண்ணாமலை மாவட்ட நகரில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்த லண்டனை சேர்ந்த வெளிநாட்டு வாலிபர் சிக்கினார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்திற்கு நேற்று மாலை வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்து நிர்வாகத்தினரிடம், தான் ரமணாஸ்ரமத்தையும்,கோயில் மலையையும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் எடுத்து சேமித்து வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும் என கேட்டுள்ளார்.
அதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர் படம் எடுக்க அனுமதி கிடையாது என கூறி அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு 7 மணியளவில் ரமணாஸ்ரமத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த வெளிநாட்டு வாலிபரை தனி அறைக்கு அழைத்து சென்று சுமார் 1 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில்அந்த வாலிபர் லண்டனை சேர்ந்த ஜோசப்(27) என்பதும், இவர் கடந்த மாதம் 14ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்து, மணக்குளவிநாயகர் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி திருவண்ணாமலையை சுற்றி பார்த்த போது ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விமானத்தை பயன்படுத்துவதற்கு லண்டனில் அனுமதி பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையை தொடர்ந்து அவரிடம் இருந்த ஆளில்லா குட்டி விமானத்தை பறிமுதல் செய்து, ஆசிரமத்தில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.
வெளிநாட்டு வாலிபர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் எடுக்க காரணம் என்ன? இங்கிருந்து படத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் தீட்டியுள்ளாரா? என காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories