விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக மோடியிடம் நவாஸ் ஷெரிப் உறுதி

Published:

புது தில்லி:

பதான்கோட் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைக்கு பாகிஸ்தான் தனது முழு ஒத்துழைப்பையும் இந்தியாவுக்கு அளிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது கூறியுள்ளார்.

இலங்கைக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பதான்கோட் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நவாஸ் ஷெரிப், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியாவுடன் பாகிஸ்தான் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். பதான்கோட் தாக்குதல் குறித்து மோடியும், நவாஸ் ஷெரிப்பிடம் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.

Related articles

Recent articles

spot_img