108 ஆம்புலன்ஸ் சேவை கே.ஆர் .பி.பிரபாகரன் எம்.பி துவங்கி வைத்தார்

பாவூர்சத்திரம் அருகே பாராளுமன்ற உறுப்பினரின் லட்சிய கிராமமான  பெத்தநாடார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மகிழ்வண்ணநாதபுரத்தில் 108  ஆம்புலன்ஸ் சேவையை  கே.ஆர் .பி.பிரபாகரன் எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டத்தில் 108  ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 25  உள்ளது தற்போது கே.ஆர் .பி.பிரபாகரன் எம்.பி  முயற்சியில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர்  சுற்று வட்டார பொதுமக்களின்  கோரிக்கையினை ஏற்று தற்போது பாவூர்சத்திரத்தில் மக்கள் அவசர காலங்களில் பயன்படும்  வகையில்  பாவூர்சத்திரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்  108  ஆம்புலன்ஸ் நிறுத்தபடுகிறது  ,பாவூர்சத்திரம் பகுதியில் ஆம்புலன்ஸ் இருப்பதால் பாவூர்சத்திரம் ,கீழப்பாவூர்,ஆவுடையானூர்,அடைக்கலப்பட்டிணம்,உட்பட சுற்றுவட்டார  இதைப் பயன்படுத்தி கொள்ளலாம்
இதுகுறித்து கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி.கூறியதாவது
கீழப்பாவூர்  ,பாவூர்சத்திரம் சுற்று வட்டார பொதுமக்களின்  அவசர கால உதவிக்கு 108  ஆம்புலன்ஸ்  தேவை என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது இது குறித்து என்னிடம் கோரிக்கை வைத்தனர் மேலும் , இப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்ப்படுகிறது  சில இடங்களில்  வாகன விபத்து நடைபெற்ற போது அந்த இடத்தில் இருந்த நான் ஆம்புலன்சிற்கு சொல்லி ஆம்புலன்ஸ் வரும் வரை இருந்து அவர்களை காப்பற்றியுள்ளேன் ஆனால்  இப்பகுதியில் ஆம்புலன்ஸ்  இல்லாததால் வர தாமதமானது இதுகுறித்து சுகாதாரதுறை அமைச்சரிடம் தெரிவித்தேன்  தற்போது தமிழக முதல்வரின் உத்தரவின் தற்போது இங்கு ஆம்புலன்ஸ் செயல்பாட்டுக்கு வந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு  ஒரு வேண்டுகோளை இந்த நேரத்தில் முன் வைக்கிறேன் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டால் முதலில் வழி விட்டு ஒதுங்கி செல்லுங்கள் ஒரு உயிரை காப்பற்றிய பெருமை உங்களைச் சாரும் என்றார் மேலும் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்சில் சிகிச்சைக்கு வரும் நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று  எடுத்துக் கூறினார்

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

108  ஆம்புலன்ஸ்   சேவை குறித்து அதிகாரிகள் கூறியதாவது
பிரசவ வலியின் போது பெண்கள் உடனடியாக ஆட்டோ பிடித்து மருத்துவமனை செல்கின்றனர் பொதுவாக பெண்கள் பிரசவவலி வரும் நேரத்தில் ஆட்டோவில் உட்கார்ந்து செல்வது பாதுகாப்பனது அல்ல ஆம்புலன்ஸ்ல்  படுக்கை வசதி உள்ளது மேலும் சிலருக்கு ஆம்புலன்சில் குழந்தையும் பிறந்துள்ளது 108   போதுமான வசதி உள்ளது அவசர காலங்களில் இச்சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் முன்பு ,கீழப்பாவூர் ,பாவூர் சத்திரம் பகுதில் இருந்து அழைப்பு வந்தால் தென்காசி அல்லது சுரண்டையில் இருந்துதான் வரவேண்டும் தற்ப்போது பாவூர்சத்திரத்தில் இருப்பதால் அழைப்பு வந்த 10 நிமிடத்திற்குள் அப்பகுதியை அடைந்து விட முடியும் என்றார்
நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டியன் ,பெத்தநாடார் பட்டி பஞ்சாயத்து தலைவர் இராதா  வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா,   108 மாவட்ட மேலாளர் மஹமது சாதிக் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆழ்வார், லிங்கத்துரை,மேலவைப் பிரதிநிதி கணபதி,ஊராட்சிசெயலர் மதனதுரை,கிளை செயலாளர்கள் அழகேசன்,கணேசன்,பி.எஸ்.என்.எல் ஆலோசனைக்குழு மதியழகன்,அம்மா பேரவை சாமிநாதன் ,மாயாண்டி,செல்லப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories