இன்று கேரளா செல்கிறார் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி

Published:

புது தில்லி:

குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி திங்கட் கிழமை இன்று 3 நாள் சுற்றுப் பயணமாக கேரளா செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் நாளை மலப்புரத்தில் நடைபெறும் மருத்துவ மாநாட்டைத் துவக்கி வைக்கிறார்.

 

திருவனந்தபுரத்தில் நடைபெறும் ஸ்ரீசித்திரை திருநாள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்சாரி, 13 ஆம் தேதி திருவனந்தபுரம் செனட் ஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நாட்டில் கல்வியில் கேரளம் முதலிடத்தை வகிப்பதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை அவர் அங்கு வெளியிடுகிறார்.

Related articles

Recent articles

spot_img