டிச.6: தாய் மதம் திரும்பிய வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி!

wasim riswi1 - 2026

வசீம் ரிஸ்வி என்ற முஸ்லிமாக இருந்தவர், ஜிதேந்த்ர நாராயண் ஸ்வாமி என்ற காஃபிர் ஆகிவிட்டார் இப்போது. இந்நிலையில், வக்பு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி என்றுமே ஒரு முஸ்லிமாக இருந்ததில்லை என்று சிலர் சமூகத் தளங்களில் அவர் குறித்து விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி, இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி இந்து மதமான சனாதன தர்மத்துக்கு மாறினார். மேலும் தனது பெயரை ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி எனவும் மாற்றிக் கொண்டார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரிய தலைவராக இருந்தவர் வசீம் ரிஸ்வி. இவர், குர்ஆனில் இருந்து சில வசனங்களைக் கூறி, அவை வன்முறையைப் போதிப்பதாகவும், அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

https://twitter.com/WasimRizvi_IND/status/1467809092508917762

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இது அம்மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுதும் இஸ்லாமியர்கள் மத்தியில் சர்ச்சையானது.

வன்முறையை தூண்டும் வகையில் குர்ஆனில் இடம்பெற்றுள்ள சில போதனைகளை நீக்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வசீம் ரிஸ்வி வழக்கு போட்டார். இதனால் அவர் மீது எதிர்ப்புகள் வலுத்தன.

தொடர்ந்து, நபி குறித்த விமர்சனக் கருத்துகளுடன் ஒரு புத்தகம் எழுதினார். இதை அடுத்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவர் இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.

https://twitter.com/WasimRizvi_IND/status/1467751496863281156

இந்நிலையில், இஸ்லாம் மதத்தில் இருந்து, தாய் மதமான ஹிந்து மதத்திற்கு மாற முடிவு செய்தார் வசீம் ரிஸ்வி. அதன்படி, காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலுக்குச் சென்று, தாம் இந்து மதத்துக்கு மாற முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இதை அடுத்து, கோயில் தலைமை பூசாரி நரசிங்கானந்த் சுவாமிகள் அவருக்கு தாய் மதம் திரும்புவதற்கான சடங்குகளைச் செய்தார்.

சாதுக்கள் பலர் முன்னிலையில் நடந்த இந்த சடங்கின்போது, வசீம் ரிஸ்விக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. இந்துவாக மதம் மாறிய வசீம் ரிஸ்விக்கு ஜிதேந்திர நாராயண் சிங் த்யாகி என பெயர் சூட்டுவதாக நரசிங்கானந்த் ஸ்வாமிகள் அறிவித்தார்.

சனாதன தர்மத்துக்கு மாறிய பின்னர் ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி காவி உடை அணிந்தபடி கோயிலில் யாகம் வளர்த்து பூஜை செய்தார். ‘இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு எனது தலைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பரிசுத்தொகை அதிகரிக்கத் தொடங்கியது; இன்று இந்து மதத்துக்கு மாறியிருக்கிறேன்; இனி இந்து மத வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி கூறினார்.

wasim rizwi3 - 2026
wasim rizwi2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories