ஐரோப்பிய சுற்றுப் பயணம் முடிந்து தில்லி திரும்பினார் ராகுல்

Published:

புது தில்லி:

ஐரோப்பிய சுற்றுப் பயணம் முடிந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நேற்று புது தில்லி திரும்பினார்.

 

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த ராகுல், 2016 புத்தாண்டை ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடுவதாகக் கூறிச் சென்றார். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்ததை அடுத்து, தனது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி, நேற்று காலை தில்லி திரும்பினார். திங்கட்கிழமை இன்று அவர் கட்சியின் வளர்ச்சி குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த 2015ல் 3ஆவது வெளிநாட்டு பயணமாக ராகுல், டிசம்பர் மாத இறுதியில் ஐரோப்பா சென்றார். இது தொடர்பான தகவல்களை அவரே தனது ‘டுவிட்டர்’ தளத்தில் பகிர்ந்து இருந்தார். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக கூறப்பட்டு இருந்தது.

Related articles

Recent articles

spot_img