கரூர்: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் கீழுர், மேலூர், கெடமலை மற்றும் போதமலை உள்ளது. இங்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைப் பகுதிகளில் மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அதே போல நியாய விலைக் கடை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது என்றும் கூறி இது தொடர்பாக பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை என்றும் மலைவாழ் மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்த நிலையில் இன்று போதமலையைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் உள்ளிட்டோர் வெற்றிலை பாக்கு மற்றும் தேங்காய் வாழைப் பழம் என தாம்பூல தட்டுடனும் மேலும் மா, சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகள் தட்;டுடனும் அதில் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வைத்து மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தியை சந்தித்து போதமலைக்கு வருமாறு அழைக்க வந்திருந்தனர்.

