திருச்சி: புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பிரிவு உபசாரவிழா வெள்ளி சனி திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றன விழாவிற்கு நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார் அறங்காவலாகள் உறுப்பினர்கள் கே.ஆர்.குணசேகரன் கே.ரெங்கசாமி அ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் முதல் இரண்டு நாட்களில் 6துறைகள் வீதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன கடைசி நாளில் 1துறையும் உதவிப்பேரசிரியர்களுக்கான பாராட்டுவிழாவும் நடைபெற்றன அப்போது கல்லூரியின் முதல்வர் ஜானகி சுவாமிநாதன் பேசியது:பெண்களுடைய வாழ்க்கையில் மூன்று கட்டங்களுக்கு பிரிவு என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்வேண்டிய கட்டாயம் உண்டாகிறது பள்ளிப்படிப்பில் படிக்கும் போதோ எதாவது ஓரு நட்பு ஏற்பட்டு ஓரு பிரிவு ஏற்படுகிறது அடுத்தது கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வெளியில் போகும்போது ஒரு பிரிவு அடுத்ததாக திருமணம் வரும்போது பெற்றோர்களை விட்டு கணவன் வீடடிற்கு போகும்போது அப்போது ஓரு பிரிவு இப்படி தன்னுடைய வாழ்நாளில் பிரிவுகளையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது ஆண்களின் நட்பிற்கும் பெண்களின் நட்பிற்கும் அதிகவேறுபாடுகள் அவர்களை பொறுத்தவரைக்கும் பிரிவை தாங்குகின்ற சக்தி அதிகமாக இருக்கும் ஆனால் பெண்களுக்கு சக்தி என்று பெரும் இருந்தும் இந்த விஷயத்தில் மட்டும் சக்தி இல்லாமல் தேம்பி அழுகின்ற நிலைமை உண்டாகிறது இதற்கு முக்கியகாரணம் பெண்களிடம் பாசம்வைக்கும் வீதம் சற்றுவித்தியசாம் என்றே சொல்லவேண்டும் இறுதியாண்டு படித்து வெளியில் போகும் மாணவிகள் வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் போது அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும் அப்போதுதான் படித்த அறிவோடு சேர்ந்து உலக அறிவு என்ற முக்கியம் உங்களுடைய மனதில் தோன்றும் முன்பு பள்ளிப்படிப்பைக்கூட ஓழுங்காக முடிக்காத பல தலைவர்கள் அறிஞர்கள் இன்றும் பேசப்படுகின்றனர் அதற்கு அவர்கள் படித்த புத்தங்கள் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது ஓரு வாக்கியம் உங்கள் வாழ்க்கையே மாற்றும் ஆனால் எந்த வார்த்தை உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று தெரியாது இன்றைக்கு பெண்களுக்கு முக்கியப் பிரச்சினை பாதுகாப்பு அதனைக்கருதியே பல பெற்றோர்கள் தங்களுடைய பெண்பிள்ளைகளை இக்கல்லூரியில் கொண்டு வந்து சேர்க்கின்றனர் என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை

