December 6, 2025, 7:28 AM
23.8 C
Chennai

பெண்களை இழிவுபடுத்தும் ஏ1: நடிகர் சந்தானத்தை கைது செய்ய இந்து தமிழர் கட்சி மனு!

ramaravikumar hm - 2025

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து சிறுபான்மை சமூகமான பிராமண சமூகப் பெண்களை கேவலப் படுத்தும் வகையிலும் சினிமா மூலம் கருத்துகளைப் பரப்பும் நடிகர் சந்தானம், ஜான்ஸன், ராஜநாராயணன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சியின் சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

அந்த மனுவில்…

இந்து சாதி சிறுபான்மை பிராமண சமுதாயத்தை இழிவு படுத்தும் A1 – Accused நம்பர் 1 என்ற திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்! நடிகர் சந்தானம், எழுத்து இயக்கம் ஜான்சன் தயாரிப்பு ராஜநாராயணன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து சாதி சிறுபான்மையினர் பிராமணசமுதாயத்தையும், பிராமண சமுதாயப்பெண்களை இழிவுபடுத்தும் வகையில்எடுக்கப்பட்ட “அக்யூஸ்டு நம்பர் ஒன்” A1 திரைப்படத்தை தடை செய்திடவும் ,இந்து சாதி சிறுபான்மை பிராமண சமுதாய மக்களையும், பெண்களை இழிவுபடுத்திய நடிகர் சந்தானம் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டியும் புகார் மனு.

திரைப்பட நடிகர் சந்தானம் நடிப்பில், எழுத்து இயக்கம் ஜான்சன் அவர்கள் தயாரிப்பு ராஜநாராயணன் இவர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்ட A1 accused நம்பர் ஒன் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

அதில் “லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் நடக்கும் கலாசலான லவ் ஸ்டோரி,” “ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை தெரிவிக்கும் அக்ரஹாரத்து மாமி”
” மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்,” காதலுக்காக குடும்பத்தையே உதறிய புரட்சி நாயகன்என்றும், திரைப்படகாட்சி வரக்கூடிய 27 7 2019 அந்த திரைப்படம் வெளிவர இருப்பதாக விளம்பரம் வெளியாகி இருக்கிறது .கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை அவர்களுடைய நடைமுறையை கேலி கிண்டல் செய்தும், புண்படுத்தும் நோக்கில் வெளியாகியிருக்கிறது.

ramaravikumar htm - 2025வேண்டுமென்றே சாதிக் கலவர நோக்கம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ள நிலையில் ஒரு வீணான பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற கெட்ட உள்நோக்கத்தோடு இந்த திரைப்படம் எடுக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறோம்.இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது.

அப்படி இருக்கையில் இந்து சாதி சிறுபான்மை பிராமணசமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்திடவும், மேற்படி நடிகர் சந்தானம் ஜான்சன் ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டியும் இந்த புகார் மனுவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்… என்று கூறப் பட்டுள்ளது.

இந்த மனுவின் நகல்கள், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி, திரைப்பட தணிக்கைக் குழு தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ட்ரைலர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories