பெண்களை இழிவுபடுத்தும் ஏ1: நடிகர் சந்தானத்தை கைது செய்ய இந்து தமிழர் கட்சி மனு!

ramaravikumar hm - 2026

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து சிறுபான்மை சமூகமான பிராமண சமூகப் பெண்களை கேவலப் படுத்தும் வகையிலும் சினிமா மூலம் கருத்துகளைப் பரப்பும் நடிகர் சந்தானம், ஜான்ஸன், ராஜநாராயணன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சியின் சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

அந்த மனுவில்…

இந்து சாதி சிறுபான்மை பிராமண சமுதாயத்தை இழிவு படுத்தும் A1 – Accused நம்பர் 1 என்ற திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்! நடிகர் சந்தானம், எழுத்து இயக்கம் ஜான்சன் தயாரிப்பு ராஜநாராயணன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து சாதி சிறுபான்மையினர் பிராமணசமுதாயத்தையும், பிராமண சமுதாயப்பெண்களை இழிவுபடுத்தும் வகையில்எடுக்கப்பட்ட “அக்யூஸ்டு நம்பர் ஒன்” A1 திரைப்படத்தை தடை செய்திடவும் ,இந்து சாதி சிறுபான்மை பிராமண சமுதாய மக்களையும், பெண்களை இழிவுபடுத்திய நடிகர் சந்தானம் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டியும் புகார் மனு.

திரைப்பட நடிகர் சந்தானம் நடிப்பில், எழுத்து இயக்கம் ஜான்சன் அவர்கள் தயாரிப்பு ராஜநாராயணன் இவர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்ட A1 accused நம்பர் ஒன் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

அதில் “லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் நடக்கும் கலாசலான லவ் ஸ்டோரி,” “ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை தெரிவிக்கும் அக்ரஹாரத்து மாமி”
” மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்,” காதலுக்காக குடும்பத்தையே உதறிய புரட்சி நாயகன்என்றும், திரைப்படகாட்சி வரக்கூடிய 27 7 2019 அந்த திரைப்படம் வெளிவர இருப்பதாக விளம்பரம் வெளியாகி இருக்கிறது .கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை அவர்களுடைய நடைமுறையை கேலி கிண்டல் செய்தும், புண்படுத்தும் நோக்கில் வெளியாகியிருக்கிறது.

ramaravikumar htm - 2026வேண்டுமென்றே சாதிக் கலவர நோக்கம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ள நிலையில் ஒரு வீணான பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற கெட்ட உள்நோக்கத்தோடு இந்த திரைப்படம் எடுக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறோம்.இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது.

அப்படி இருக்கையில் இந்து சாதி சிறுபான்மை பிராமணசமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்திடவும், மேற்படி நடிகர் சந்தானம் ஜான்சன் ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டியும் இந்த புகார் மனுவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்… என்று கூறப் பட்டுள்ளது.

இந்த மனுவின் நகல்கள், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி, திரைப்பட தணிக்கைக் குழு தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ட்ரைலர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories