குல்பூஷன் ஜாதவ் நிரபராதி! சர்வதேச நீதிமன்றம் உத்தரவு! மோடி அரசின் அணுகுமுறைக்கு வெற்றி!

kulbhushan jadav - 2026

குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

குல்பூஷன் ஜாதவ் வழக்கின் தீர்ப்பை பாகிஸ்தான் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சர்வதேச நீதிமன்றம், வழக்கை மீண்டும் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

குல்பூஷன் ஜாதவ் ஈரானில் இருந்து வந்தபோது பாகிஸ்தானின் பலூஜிஸ்தான் மாகாணத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப் பட்டதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், ஈரானுக்கு தொழில் ரீதியாக அவர் சென்றபோது, அங்கிருந்து அவரை பாகிஸ்தான் கடத்தியுள்ளதாக இந்தியா கூறியது.

இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017 ஏப்ரலில் குல்பூஷன் ஜாதவை, இந்தியாவின் உளவாளி என்று கூறி மரண தண்டனை வழங்கியது. இது, இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 2017 மே மாதத்தில், சர்வதேச நீதிமன்றத்தை அணுகிய இந்திய அரசு, குல்பூஷன் ஜாதவை கைது செய்தது தொடர்பாக நீண்ட நாட்களாக தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியது.

ICJ on Kulbhushan Jadhav case min - 2026குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக ரீதியிலான உதவிகளைச் செய்ய மறுத்ததன் மூலம் வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இதை அடுத்து 10 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கும் வரையில் குல்பூஷன் ஜாதவுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று தெரிவித்தது. அதன்படி, இன்று அது தீர்ப்பு வழங்கியது.

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

குல்பூஷண் ஜாதவிற்கு தூதரக உதவியை அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச நீதிமன்ற உத்தரவு காரணமாக இனி அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது. இது மோடி அரசுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப் படுகிறது.

இதற்கிடையே தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories