ராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்: போக்குவரத்துத் துறை!

Published:

rapido app - 2026

ராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. பொதுமக்கள் யாரும் ‘ராபிடோ ஆப்’ மூலமாக வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ராபிடோ ஆப் மூலம் பயணம் செய்த 37 வாகனங்களை போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது.

இருசக்கர வாகனம் என்பது தனி நபருக்கானது. அதனை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. ரேபிடோ ஆப் தொடர்பாக ஏற்கெனவே கார் ஓட்டுநர்கள் போக்குவரத்துறையிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், ரேபிடோ ஆப் மூலம் பயணிக்கும்போது விபத்துக் காப்பீடுகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது போக்குவரத்துத் துறை!

சென்னையில் ரேபிடோ ஆப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் போல புக் செய்து, 37 இரு சக்கர வாகனங்களைப் பிடித்த கார் ஓட்டுநர்கள், அவர்களை போக்குவரத்துறையிடம் ஒப்படைத்தனர்.

ரேபிடோ ஆப்பினை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே நீக்க வேண்டும் என டாக்ஸி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

RapidO – ரேபிடோ ஆப் மூலம் பைக் டாக்ஸியில் பயணம் செய்வதால், தங்களது தொழில் பாதிக்கப் படுவதாகவும் டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related articles

Recent articles

spot_img