திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: நான்காம் பாசுரம்

Published:

koorathazhwan 3 - 2026

ஆழ்வானை ஒருவன் தேவ தாந்திரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேட்க, ஆழ்வான் சாஸ்திர விரோதமாக கேளாதே கொள்ளாய் தேவதைகள் உங்களை கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய் என்றார்.

அதாவது மற்ற தேவதைகளைக் கண்டால் ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற கேள்வியே சாஸ்திர விரோதம். அந்த தேவதைகளை ஸ்ரீவைஷ்ணவர்கள் கண்டால் எப்படி நடந்து கொள்ளும் என்றல்லவா கேட்க வேண்டும். அதாவது தேவதாந்திரங்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றபடி தேவதாந்திரங்கள்.. இதர தெய்வங்கள்

II – ஊழி முதல்வன் உருவம்போல்…
நாச்சியார் விழி விழிக்க ஒண்னாதா போலே மழைக்கால மேகங்கள் ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கருத்து மழை பொழிய வேண்டும் என்பது ஆழி மழைக் கண்ணா பாசுரத்தில் உள்ள சொற்கள்.

srirangan pattar - 2026

எம்பெருமானுடைய நிறத்தை கொள்ளலாமே ஒழிய அவனுடைய குணத்தை ஒருநாளும் கொள்ள முடியாது என்றபடி.
ஸ்ரீரங்கத்தில் திருஅத்தியயன உற்சவத்தில் பகல்பத்து கடைசி நாளில் நம்பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலம் சாற்றுவதுண்டு. அப்போது ஸ்ரீ பட்டர் நாச்சியார் திருக்கோலம் பெருமாளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தாலும் அந்தக் கருணை பொங்கும் விழி நாச்சியாருக்கு மட்டுமே ஒக்கும் என்று அருளிச் செய்த வார்த்தை இங்கு நினைக்கத்தக்கது

அதாவது எப்படி பிராட்டிக்கு காருண்யமே வடிவெடுத்த கண்கள் இருக்கும் அது எம்பெருமான் விஷயத்தில் பொருந்தா. அதுபோல் மேகம் எம்பெருமான் நிறத்தை கொள்ளலாமே தவிர குணத்தை ஒரு போதும் கொள்ள முடியாது என்றபடி

  • வானமாமலை பத்மநாபன்
ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img