எம்பெருமானாரைப் போலே – அருங்கலமே… நாலாயிரப்படி!
நோற்றுச் சுவர்க்கத்தில் எழுப்பப்படும் பெண் பிள்ளை மிகவும் ஸ்ரேஷ்டமானவள் என்றபடி.
ஒரு ஹாரத்துக்கு கல் பதித்தார்போல், தலைவியாய், ப்ர்தானமாய் விளங்குபவள் என்றபடி.
இங்கு எம்பெருமானாரைப் போலே என்பது, எம்பெருமானாரும் அவர் திருமுடி சம்பந்தம் பெற்ற முந்தைய ஆசார்யார்கள் என்ன, திருவடி சம்பந்தம் பெற்ற பிந்தைய ஆசார்யர்களில் நடுநாயகமாய் விளங்கியது போலே என்றபடி.
குறிப்பு.. இங்கு இந்த வார்த்தை வ்யாக்கியான கர்த்தாவின் கருத்து போல் இருப்பதால் ஸ்ரீ ஆய் ஜனனாச்சார்யாரின் வார்த்தையாக கொள்ளலாம்.
- வானமாமலை பத்மனாபன்