December 13, 2025, 1:34 PM
28 C
Chennai

முஸ்லிம் பெண்கள் புர்காவை விலக்கிக் காட்ட வேண்டும்; ஆங்கிலத் தேர்ச்சி தேவை: டேவிட் கேமரூன்

லண்டன்:

பாதுகாப்பு அதிகாரிகளிடம் முஸ்லிம் பெண்கள் தங்கள் புர்காவை விலக்கி முகம் காட்ட வேண்டும்; மேலும் இங்கிலாந்தில் குடியேறும் முஸ்லிம் பெண்கள் தங்கள் ஆங்கிலத் திறனை வளர்த்துக்  கொள்ள வேண்டும், இல்லாவிடில் வெளியேற வேண்டும்  என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

பிபிசியின் ரேடியோ 4-க்கு அளித்த பேட்டியில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த கருத்து:

“முஸ்லிம் பெண்கள் புர்காவை விலக்கி, தங்களது முகத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் காட்டி,  உதவி புரிய வேண்டும். பயங்கரவாதத்தை சமாளிக்கும் நம் நாட்டின் முயற்சிக்கு நீங்கள் உதவ வேண்டும்.

நீதிமன்றங்கள், குடியேற்ற சோதனை மையங்கள் போன்ற இடங்களில் இதனைக் கடைபிடியுங்கள். இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு அவர்கள் விரும்பும் ஆடையை சுதந்திரமாக அணிய உரிமை உள்ளது. ஆடை சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது.

நாட்டில் குடியேறியும், ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ளாத முஸ்லிம் பெண்களுக்கான குடியுரிமையை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்படும்.

– இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை ஊக்குவிக்க 28 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது அரசு. இங்கிலாந்தில் உள்ள 1,90,000 முஸ்லிம் பெண்கள் ஆங்கிலத் திறனில் பேச குறைந்த அளவோ அல்லது தெரியாமலோ உள்ளனர் என அந்நாட்டு அரசுப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், டேவிட் கேமரூன் கருத்துக்கு அந்நாட்டில் சிலரிடம் எதிர்ப்பு கிளம்பாமலும் இல்லை. விமர்சனங்களையும் சிலர் முன்வைத்துள்ளனர்.

இது குறித்த செய்தித் தொகுப்பு காணொலி:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Topics

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

Entertainment News

Popular Categories